Venmegam Vinnil |
---|
வெண் மேகம் விண்ணில் நின்று
கண்ணே இன்று பன்னீர் தூவும்
செவ்வானம் மண்ணில் வந்து
மஞ்சள் நீராட்டும்
விடிகாலை வெள்ளி மீனே
என் வாழ்வே உன்னால் தானே
கண்ணே நான் அண்ணன் அல்ல
உன்னை ஈன்ற அன்னை நானே
கண்ணீரில் முத்து தொங்கல்
கட்டித் தந்தேனே
ஏழேழு ஜென்மம் இந்த
அண்ணன் தங்கை சொந்தம் வேண்டும்
எந்நாளும் எந்தன் பக்கம்
தாயே நீ வேண்டும்
உன் கண்ணில் கண்ணீர் வந்தால்
எந்தன் கண்ணில் ரத்தம் பாயும்
உன் ஆவி எந்தன் ஆவி
ரெண்டும் ஒன்றாகும்
உன் கண்கள் இல்லாமல்
என் கண்கள் பார்க்குமோ
உன் கால்கள் இல்லாமல்
என் கால்கள் போகுமோ
என் வானம் விடிவதும் பகல் முடிவதும்
உந்தன் பார்வையாஆல்
கண்ணே நான் அண்ணன் அல்ல
உன்னை ஈன்ற அன்னை நானே
கண்ணீரில் முத்து தொங்கல்
கட்டித் தந்தேனே
மன்னாதி மன்னன் எல்லாம்
உன்னை வந்து பெண் பார்க்க
மையேந்தும் கண்ணே உந்தன்
கண்ணோ மண் பார்க்க
கண்ணோரம் வெட்கம் வந்து
நெஞ்சம் எங்கும் மின்னல் ஓட
காலாலே வண்ணக்கோலம்
மண்ணில் நீ போட
செந்தூரம் சிந்தாதோ என் தங்கை பாதமே
அந்நேரம் ஆகாயம் பூமாரி தூவுமே
சொன்னாலும் இனிக்குது
நெஞ்சில் ஒலிக்குது இன்ப ராகமேஏஏ
வெண் மேகம் விண்ணில் நின்று
கண்ணே இன்று பன்னீர் தூவும்
செவ்வானம் மண்ணில் வந்து
மஞ்சள் நீராட்டும்
விடிகாலை வெள்ளி மீனே
என் வாழ்வே உன்னால் தானே
கண்ணே நான் அண்ணன் அல்ல
உன்னை ஈன்ற அன்னை நானே
கண்ணீரில் முத்து தொங்கல்
கட்டித் தந்தேனே