Vennila Vaanil Varum

Vennila Vaanil Varum Song Lyrics In English


வெண்ணிலா வானில்
வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்
வெண்ணிலா வானில்
வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்

எண்ணிலாக் கனவுகளில்
எதையெதையோ நினைத்திருந்தேன்
எண்ணிலாக் கனவுகளில்
எதையெதையோ நினைத்திருந்தேன்

வெண்ணிலா வானில்
வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்

ஆஅஆஅஆஅஆ
ஆஅஆஅஆஅஆ
நாலு வித குணமிருக்கும்
அஞ்சுகின்ற மனமிருக்கும்
நாலு வித குணமிருக்கும்
அஞ்சுகின்ற மனமிருக்கும்

ஆறுகின்ற பொழுது வரை
அனல் போல் கொதிப்பதெது

ஆஅஆஅஆஅஆ
ஆசை கொண்ட இதயமது

வெண்ணிலா வானில்
வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்

வான வில்லின் நிறமெடுத்து
மேகமென்னும் வெண் திரையில்
வான வில்லின் நிறமெடுத்து
மேகமென்னும் வெண் திரையில்

மின்னல் எனும் தூரிகையால்
நான் வரைந்த கோலமெது

ஆஅஆஅஆஅஆ
கன்னி எந்தன் வடிவமது

வெண்ணிலா வானில்
வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்


காமன் கை வில்லெடுத்து
அஞ்சு விதப் பூத்தொடுத்து
காமன் கை வில்லெடுத்து
அஞ்சு விதப் பூத்தொடுத்து

பூமகளின் நெஞ்சினிலே
போர் தொடுக்கும் நேரமெது

ஆஅஆஅஆஅஆ
மஞ்சள் வெயில் மாலை அது

முத்துச் சிப்பி வாய் திறக்க
மோகம் கொண்டு துடித்திருக்க
முத்துச் சிப்பி வாய் திறக்க
மோகம் கொண்டு துடித்திருக்க

கொட்டும் மழைத் துளி விழுந்து
கொஞ்சக் கொஞ்ச என்ன வரும்

ஆஅஆஅஆஅஆ
முத்து ஒன்று பிறந்து வரும்

வெண்ணிலா வானில்
வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்

எண்ணிலாக் கனவுகளில்
எதையெதையோ நினைத்திருந்தேன்

இருவர் : வெண்ணிலா வானில்
வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்