Vennila Vaanil Varum |
---|
வெண்ணிலா வானில்
வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்
வெண்ணிலா வானில்
வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்
எண்ணிலாக் கனவுகளில்
எதையெதையோ நினைத்திருந்தேன்
எண்ணிலாக் கனவுகளில்
எதையெதையோ நினைத்திருந்தேன்
வெண்ணிலா வானில்
வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்
ஆஅஆஅஆஅஆ
ஆஅஆஅஆஅஆ
நாலு வித குணமிருக்கும்
அஞ்சுகின்ற மனமிருக்கும்
நாலு வித குணமிருக்கும்
அஞ்சுகின்ற மனமிருக்கும்
ஆறுகின்ற பொழுது வரை
அனல் போல் கொதிப்பதெது
ஆஅஆஅஆஅஆ
ஆசை கொண்ட இதயமது
வெண்ணிலா வானில்
வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்
வான வில்லின் நிறமெடுத்து
மேகமென்னும் வெண் திரையில்
வான வில்லின் நிறமெடுத்து
மேகமென்னும் வெண் திரையில்
மின்னல் எனும் தூரிகையால்
நான் வரைந்த கோலமெது
ஆஅஆஅஆஅஆ
கன்னி எந்தன் வடிவமது
வெண்ணிலா வானில்
வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்
காமன் கை வில்லெடுத்து
அஞ்சு விதப் பூத்தொடுத்து
காமன் கை வில்லெடுத்து
அஞ்சு விதப் பூத்தொடுத்து
பூமகளின் நெஞ்சினிலே
போர் தொடுக்கும் நேரமெது
ஆஅஆஅஆஅஆ
மஞ்சள் வெயில் மாலை அது
முத்துச் சிப்பி வாய் திறக்க
மோகம் கொண்டு துடித்திருக்க
முத்துச் சிப்பி வாய் திறக்க
மோகம் கொண்டு துடித்திருக்க
கொட்டும் மழைத் துளி விழுந்து
கொஞ்சக் கொஞ்ச என்ன வரும்
ஆஅஆஅஆஅஆ
முத்து ஒன்று பிறந்து வரும்
வெண்ணிலா வானில்
வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்
எண்ணிலாக் கனவுகளில்
எதையெதையோ நினைத்திருந்தேன்
இருவர் : வெண்ணிலா வானில்
வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்