Vennilavil Malligaiyil Vilaiyadum |
---|
பாடலாசிரியர் : காமகோடியன்
வெண்ணிலவில் மல்லிகையில் விளையாடும் அமைதி சுகம் கவிதை சுகம் அது காதல் சுகம் இளமை தரும் ஒரு இனிய சுகம்
மயங்கும் வெண்ணிலவில் மல்லிகையில் விளையாடும் அமைதி சுகம் கவிதை சுகம் அது காதல் சுகம் இளமை தரும் ஒரு இனிய சுகம்
கனி மொழி கூறும் மணி மொழி யாவும் கவிதைகள் ஆகும் மனதினை நீவும்
வெண்ணிலவில் மல்லிகையில் விளையாடும் அமைதி சுகம் கவிதை சுகம் அது காதல் சுகம் இளமை தரும் ஒரு இனிய சுகம்
காற்றாடும் புது வானில் கீற்று நிலா சிணுங்குவதைக் கண்டேன் ஹோய்
காதோரம் நீ பேச கோல மயில் கொஞ்சுவதைக் கண்டேன் ஹா
நீங்காத ரீங்காரம் நீயாகும் போது
நீ ஏது நான் ஏது வா வா இப்போது
அது தான் நம் யோகம் என் ராஜா
மயங்கும் வெண்ணிலவில் மல்லிகையில் விளையாடும் அமைதி சுகம் கவிதை சுகம் அது காதல் சுகம் இளமை தரும் ஒரு இனிய சுகம்
கனி மொழி கூறும் மணி மொழி யாவும் கவிதைகள் ஆகும் மனதினை நீவும்
வெண்ணிலவில் மல்லிகையில் விளையாடும் அமைதி சுகம் கவிதை சுகம் அது காதல் சுகம் இளமை தரும் ஒரு இனிய சுகம்
தேனூறும் சுவை யாவும் தேவி இவள் பூ இதழில் ஊறும்
தேடாத சுகம் யாவும் தேடி வரும் புன்னகையில் பாரும்
மலர் வீணை நான் மீட்ட இசை பொங்கும் மேனி ஒரு கோடி புது ராகம் தருவாளே ராணி ரோஜாவின் ராஜாதி ராஜா
மயங்கும் வெண்ணிலவில் மல்லிகையில் விளையாடும் அமைதி சுகம் கவிதை சுகம் அது காதல் சுகம் இளமை தரும் ஒரு இனிய சுகம்
கனி மொழி கூறும் மணி மொழி யாவும் கவிதைகள் ஆகும் மனதினை நீவும்
வெண்ணிலவில் மல்லிகையில் விளையாடும் அமைதி சுகம் கவிதை சுகம்
அது காதல் சுகம் இளமை தரும்
ஒரு இனிய சுகம்