Vennilavukku Aasai Patten |
---|
இசை அமைப்பாளர் : இளையராஜா
வெண்ணிலவுக்காசை பட்டேன்
கிட்டுமோ கையில் கிட்டுமோ
வானவில்லுக்காசை பட்டேன்
எட்டுமோ அது எட்டுமோ
ஏழையின் மனமே ஏங்குது தினமே
நல்லது நடக்கும் நாளும் மலரட்டும்
வானத்து தாரகையோ
யார் அவள் தேவதையோ
வார்த்தைகளும் மயங்கிடும்
கலைவாணியின் மகளோ
வண்ணத்தில் தீட்டிடவோ
எண்ணத்திதை காட்டிடவோ
பார்த்த படி சொல்லிடத் தான்
வார்த்தைகள் வருமோ
மலராய் சிரிப்பாள் மனதை பறிப்பாள்
மலராய் சிரிப்பாள் மனதை பறிப்பாள்
கனவில் தினமும் வந்து கண்ணடிப்பாள்
வானத்து தாரகையோ
யார் அவள் தேவதையோ
வார்த்தைகளும் மயங்கிடும்
கலைவாணியின் மகளோ
சுட்டும் விழிச் சுடர் பார்த்து
மனம் கெட்டதைச் சொல்லட்டுமா
கொட்டும் பனித் துளி கூட
என்னை சுட்டதை சொல்லட்டுமா
கம்பனிடம் கடன் கேட்டு
கொஞ்சம் கற்பனை வாங்கட்டுமா
காதல் கொண்ட முகம் பார்த்து
நானும் வர்ணனை செய்யட்டுமா
அவள் வாங்கிப் போனாள் என் தூக்கம்
முகம் கண்டாலும் தீராதென் ஏக்கம்
கண்டு பிடி யாரு கண்டு பிடி
பிரம்மனுக்கு ஒரு தந்தி அடி
அவள் பேச்சு மொழியல்ல மகுடி
வானத்து தாரகையோ
யார் அவள் தேவதையோ
வார்த்தைகளும் மயங்கிடும்
கலைவாணியின் மகளோ
வண்ணத்தில் தீட்டிடவோ
எண்ணத்திதை காட்டிடவோ
பார்த்த படி சொல்லிடத் தான்
வார்த்தைகள் வருமோ
மொட்டு வெடித்ததைப் போலே
அந்த பட்டுக் குளிர் முகமோ
முத்துச் சிதறுதல் போலே
சின்னச் சிட்டுச் சிரிப்பழகோ
தித்தித்திடும் தேன் சுவையை
நான் சொல்வது எப்படியோ
பொங்கி வரும் மலர் வாசம்
அதை அள்ளுவதெப்படியோ
ஸ்வரம் ஏழில் அடங்காத ராகம்
இது எல்லோர்க்கும் கிடைக்காத கீதம்
ராதை அவள் நானும் கண்ணன் இல்லை
ராதைக்கு நான் ஒரு மன்னன் இல்லை
அவளோடு பொருந்தாதென் அழகு
வானத்து தாரகையோ
யார் அவள் தேவதையோ
வார்த்தைகளும் மயங்கிடும்
கலைவாணியின் மகளோ
வண்ணத்தில் தீட்டிடவோ
எண்ணத்திதை காட்டிடவோ
பார்த்த படி சொல்லிடத் தான்
வார்த்தைகள் வருமோ
மலராய் சிரிப்பாள் மனதை பறிப்பாள்
மலராய் சிரிப்பாள் மனதை பறிப்பாள்
கனவில் தினமும் வந்து கண்ணடிப்பாள்
வானத்து தாரகையோ
யார் அவள் தேவதையோ
வார்த்தைகளும் மயங்கிடும்
கலைவாணியின் மகளோ
வண்ணத்தில் தீட்டிடவோ
எண்ணத்திதை காட்டிடவோ
பார்த்த படி சொல்லிடத் தான்
வார்த்தைகள் வருமோ