Veppamaram Noyile |
---|
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆஅ ஆஅஆஅ
வேப்பமரம் நோயிலே வைத்தியரும் பாயிலே
காவல் காக்கும் அய்யனாரும் களவு போனாரே
வேப்பமரம் நோயிலே வைத்தியரும் பாயிலே
காவல் காக்கும் அய்யனாரும் களவு போனாரே
சட்டம் பேசும் வக்கீலும் சட்டத்துல மாட்டிக்கிட்டான்
எத்தன சந்து பொந்து எப்படி நீதி வாழுமடா
வேப்பமரம் நோயிலே வைத்தியரும் பாயிலே
காவல் காக்கும் அய்யனாரும் களவு போனாரே
ஓலக் குடிசையிலே ஒரு உத்தமி செல்லக்கண்ணு
மாளிகை மஞ்சத்திலே ஒரு மானிட பேய் ஒண்ணு
பத்தினி தாயின் மேல் பாவி பழிய போட்டுட்டான்
உத்தமி வாழ்க்கைய ஊதி ஒளிய அணச்சுட்டான்
உண்மையை தேடிப் போனேன் தப்பெனக்கு புரிஞ்சுது
கெட்டவன் கையிப்பட்டு சட்டமும் வளைஞ்சுது
சதிதான் வசமா என்னை பூட்டி போட்டது
வேப்பமரம் நோயிலே வைத்தியரும் பாயிலே
காவல் காக்கும் அய்யனாரும் களவு போனாரே
புல்லுக்கு மத்தியிலே நல்ல நெல்லு வெளஞ்சாலும்
நெல்லும் களையாகும் என்று சொல்லும் உலகமடா
என்ன புல்லாக்கி அடியோடறுக்க பாக்குறான்
மாட்டு கொட்டத்துல மடக்கி பூட்டப் பாக்குறான்
புல்லா புலிக்குட்டியா கொஞ்சம் பொறு அண்ணாச்சி
பூட்ட கொஞ்சம் தெறந்து விட்டு
நின்னு பாரு அண்ணாச்சி
பொறுத்திட மாட்டேன் பழி முடிச்சு காட்டுவேன்
வேப்பமரம் நோயிலே வைத்தியரும் பாயிலே
காவல் காக்கும் அய்யனாரும் களவு போனாரே
வேப்பமரம் நோயிலே வைத்தியரும் பாயிலே
காவல் காக்கும் அய்யனாரும் களவு போனாரே
சட்டம் பேசும் வக்கீலும் சட்டத்துல மாட்டிக்கிட்டான்
எத்தன சந்து பொந்து எப்படி நீதி வாழுமடா
வேப்பமரம் நோயிலே வைத்தியரும் பாயிலே
காவல் காக்கும் அய்யனாரும் களவு போனாரே