Vetta Veli Pottalile |
---|
வெட்ட வெளி பொட்டலிலே
நட்ட நடு இராவினிலே
தொட்டவன தேடுகிறா
பொட்டு வச்ச பூங்குயிலே
{போனவன காணலியே
பொண்ணு மனம் ஆறலியே} (2)
வெட்ட வெளி பொட்டலிலே
நட்ட நடு இராவினிலே இராவினிலே
இராவினிலே
{நெசமெல்லாம் கதையா போச்சு
நெனப்பெல்லாம் சுமையா ஆச்சு
வாடுறேன் வதங்குறேன்
வாடையே நீ தான் போய்ச்சொல்லு} (2)
வாரேன்னு சொன்ன மச்சான்
வனவாசம் பண்ண வச்சான்
தான் சொன்ன பேச்சை எல்லாம்
தண்ணியிலே எழுதி வெச்சான்
தவியாகத் தவிச்சேன் இங்கே நான்ஆஆஆ
வெட்ட வெளி பொட்டலிலே
நட்ட நடு இராவினிலே
போனவன காணலியே
{ஊரெல்லாம் உறங்கும் பொழுது
ஒருத்தி நான் இருக்கேன் அழுது
மருகுறேன் உருகுறேன்
மேகமே நீ தான் போய்ச்சொல்லு] (2)
ஆத்தோடு நாணல் கொஞ்சும்
காத்தோடு பூக்கள் கொஞ்சும்
யாரோடு நான்தான் கொஞ்ச
அடங்காத கண்ணீர் மிஞ்ச
வெளுக்காத கிழக்கா இங்கே நான்ஆஆஆ
வெட்ட வெளி பொட்டலிலே
நட்ட நடு இராவினிலே
தொட்டவன தேடுகிறா
பொட்டு வச்ச பூங்குயிலே
{போனவன காணலியே
பொண்ணு மனம் ஆறலியே} (2)
ஆறலியே ஆறலியே