Vidhi Nadhiyae |
---|
ஆறாய் மனம் ஆறாய் மனம்
முடிவிலி ஆறாகவே
பாயும் உந்தன் அலைகளின் மேலே
ஓர் எதிர் ஒளி போலே நான்
ஆறாய் மனம் ஆறாய் மனம்
விரைந்திடும் ஆறாகவே
நீளும் அதன் கரைகளின் மேலே
கால் தடங்களை போலே நீ
இதழ் மேலே
அணியும் புன்னகையும்
விழியுள்ளே புதையும்
கண்ணீரும்
மனமெல்லாம் கனக்கும்
நினைவுகளோடு
முன்னே செல்கின்றேன்
நீ ஒரு தினம்
காதல் பாய்கிறாய்
ஏன் மறுதினம்
காய்ந்து போகிறாய்
நீ என்னை எங்கே
கொண்டு செல்கிறாய்
என் விதி நதியே
நீ ஒரு கணம்
பாடல் ஆகிறாய்
ஏன் மறுகணம்
தேய்ந்து போகிறாய்
நீ என்னை எங்கே
கொண்டு செல்கிறாய்
என் விதி நதியே
என் விதி நதியே
எனக்காய் சில பூக்கள்
பிறக்காதா
திறக்காதா
எனக்காய் சில தூறல்
மலர்வாயா
வின் கிளையே
சில ஆசைகளை
நிறைவேற்றித்தான்
பல ஆசைகளை நுரைபோல்
ஆக்கினாய்
ஒரு நாள் வீழா
மறு நாள் மீள
என் நெஞ்சுக்குள்
சொல்லித்தந்தாய்
நீ ஒரு தினம்
காதல் பாய்கிறாய்
ஏன் மறுதினம்
காய்ந்து போகிறாய்
நீ என்னை எங்கே
கொண்டு செல்கிறாய்
என் விதி நதியே
நீ ஒரு கணம்
பாடல் ஆகிறாய்
ஏன் மறுகணம்
தேய்ந்து போகிறாய்
நீ என்னை எங்கே
கொண்டு செல்கிறாய்
என் விதி நதியே
என் விதி நதியே
என் விதி நதியே