Vidhiyaa Vidhavayaa |
---|
விதியா விதவையா
வினையின் கொடுமையா
சதியின் கரங்களில்
இவள் ஒர் பதுமையா
என்னக்கோலம் இது ஓஓ
சோகச் சுமை
கண்ணீர்க் கதை ஓஓ
பெண்கள் நிலை ஓ
விதியா விதவையா
வினையின் கொடுமையா
மனதிற்குகந்த கணவன் கிடைக்க
சுமங்கலியாய் ஆனவள்
கிடைத்த கணவன் பிழைத்து இருக்க
அமங்கலியாய்ப் போனவள்
மலர்கள் முடிக்க
தலைவன் இருந்தும்
மலர் இழந்தாள் பூங்கொடி
வளையல் வழங்க
துணைவன் இருந்தும்
வளை இழந்தாள் பைங்கிளி
பூவும் வண்ணப்பொட்டும்
இந்தப் பெண்ணை நீங்கலாமா
கைம்பெண் என்ற வேடம்
இந்தப் பெண்மை தாங்கலாமா
நியாயங்களே ஓஓ
பொய்யாவதா
மாயங்களே ஓஓ
மெய்யாவதா ஓ
விதியா விதவையா
வினையின் கொடுமையா
குடும்ப விளக்கை
தெருவில் நிறுத்தி
வருத்துவது நீதியா
வசந்தப் பறவை
வெளுத்தப் புடவை
உடுத்துவது நேர்மையா
அடுத்துக் கெடுக்கும்
கொடிய மனங்கள்
உயரத்திலே வாழ்வதா
புனிதம் நிறைந்த மனித உயிர்கள்
தரையினிலே வீழ்வதா
தாயி மகமாயி வந்து
நீயே காக்க வேண்டும்
சூழ்ச்சி மண்ணில் சாய
கையில் சூலம் தூக்க வேண்டும்
உனை நம்பியே ஓஓ
பெண் ஜென்மமே
போராடுதே ஓஓ
பதில் வேண்டுமே ஓ
விதியா விதவையா
வினையின் கொடுமையா
சதியின் கரங்களில்
இவள் ஒர் பதுமையா
என்னக்கோலம் இது ஓஓ
சோகச் சுமை
கண்ணீர்க் கதை ஓஓ
பெண்கள் நிலை ஓ
விதியா விதவையா
வினையின் கொடுமையா
சதியின் கரங்களில்
இவள் ஒர் பதுமையா