Vidukathai Ondru Thodarkathai Ondru |
---|
ஆரிராரோஓஓ
ஆரிராரி ராரோஆரிராரி ராரோ
விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று
விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று
யார் கதை எதுதான் என்று
நீ தான் அறிவாயோ என் கண்ணே
ஆரம்பம் முடிவும் எங்கே
அறிந்தால் சொல்வாயோ
விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று
மகன் போல உன்னை மடியேந்தும் என்னை
யார் என்று நீ கேளடா அன்னையை
அவள் சொல்லுவாள் உன்னிடம் உண்மையை
மாலை இளம் காற்றே மடல் வாழை கீற்றே
காலம் முழுதும் நலம் பெற கண்ணே நீ வாழ்க
விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று
யார் கதை எதுதான் என்று
நீ தான் அறிவாயோ என் கண்ணே
ஆரம்பம் முடிவும் எங்கே
அறிந்தால் சொல்வாயோ
நாள்தோறும் எந்தன் நலம் நாடும் தெய்வம்
தாலாட்டவே வந்தது உன்னையே
நீ சொல்லடா அன்னையின் நன்றியை
ஒரு மனதில் பாசம் ஒரு மனதில் தாகம்
தேவன் எழுதும் கதை இது கண்ணே காண்க
விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று
யார் கதை எதுதான் என்று
நீ தான் அறிவாயோ என் கண்ணே
ஆரம்பம் முடிவும் எங்கே
அறிந்தால் சொல்வாயோ
விதியோடு வாழ்க்கை விளையாடும் வேளை
விதியல்லவோ என்றுமே வெல்வது
இதுவல்லவோ இன்று நான் கண்டது
காலொடிந்த கிள்ளை நடமாடவில்லை
தேவையறிந்து துணை வரும் நெஞ்சே வாழ்க
விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று
யார் கதை எதுதான் என்று
நீ தான் அறிவாயோ
என் கண்ணே ஆரம்பம் முடிவும் எங்கே
அறிந்தால் சொல்வாயோ
விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று
ஆரிராரோஓஓ
ஆரிராரி ராரோஆரிராரி ராரோ