Vinaa Vinaa |
---|
வினா வினா
ஒரே வினா விடாமலே
எழும் வினா நிறைவுறா
ஒரே கனா இறைவனா
மனிதனா
ஆற்றில் செல்லும்
நீரில் நேற்றின் வெள்ளம்
எது நேற்றெல்லாம் மாயையே
சூறை காற்றின்
ஊடாய் சாயா நாணற்
காடாய் வேண்டும் ஓர்
மேன்மையே
பூபாளம்
கேட்காதோ ஆகாயம்
நம் தீபம் ஆகாதோ
வினா வினா
ஒரே வினா விடாமலே
எழும் வினா
சிக்குமா
சிக்குமா சிலந்தி
தான் அமைத்த
தன் வலையில்
சிக்குதே
சிக்குதே மனது
பாவம் என்னும்
பொய் வலையில்
அம்மை அப்பன்
காக்கும் பிள்ளை ஆயுள்
நூறு வாழும் இம்மை
செய்த நன்மை நம்மை
தீமை கொன்று காக்கும்
அன்பே உயரிய
ஆவணம் செய்த அறம்
நம்மை காத்திடும்
வினா வினா
ஒரே வினா விடாமலே
எழும் வினா நிறைவுறா
ஒரே கனா இறைவனா
மனிதனா
கத்தியா புத்தியா
இரண்டில் வெல்வதேது
சொல் மனமே புத்தியே
புத்தியே உலகில்
வெல்லுகின்ற ஆயுதமே
பாறை மேலே
தேரை போனால் பாத
சுவடு இல்லையே
வேரை போலே உண்மை
கூட வெளியே வந்தால்
தொல்லையே
கூறா மனமே
ரகசியம் உலகில் உறவே
அவசியம்
வினா வினா
ஒரே வினா விடாமலே
எழும் வினா நிறைவுறா
ஒரே கனா இறைவனா
மனிதனா
ஆற்றில் செல்லும்
நீரில் நேற்றின் வெள்ளம்
எது நேற்றெல்லாம் மாயையே
சூறை காற்றின்
ஊடாய் சாயா நாணற்
காடாய் வேண்டும் ஓர்
மேன்மையே
பூபாளம்
கேட்காதோ ஆகாயம்
நம் தீபம் ஆகாதோ
பூபாளம் கேட்காதோ
ஆகாயம் நம் தீபம் ஆகாதோ