Vinmeen Vidhaiyil |
---|
விண்மீன் விதையில்
நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில்
எனையே தொலைத்தேன்
மழையின் இசை கேட்டு
மலரே தலையாட்டு
மழலை மொழி போல
மனதில் ஒரு பாட்டு
இனி நீயும் நானும்
ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து
விண்மீன் விதையில்
நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில்
எனையே தொலைத்தேன்
நான் பேசாத
மௌனம் எல்லாம்
உன் கண்கள் பேசும்
உனை காணாத நேரம்
என்னை கடிகாரம் கேட்கும்
மணல் மீது தூறும் மழை
போலவே மனதோடு நீதான்
நுழைந்தாயடி
முதல் பெண்தானே
நீதானே எனக்குள் நானே
ஏற்பேனே இனி நீயும் நானும்
ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து
ஒரு பெண்ணாக
உன் மேல் நானே பேராசை
கொண்டேன் உனை முன்னாலே
பார்க்கும் போது பேசாமல் நின்றேன்
எதற்காக உன்னை
எதிர்ப்பார்க்கிறேன்
எனக்குள்ளே நானும்
தினம் கேட்கிறேன்
இனிமேல் நானே
நீயானேன் இவன்
பின்னாலே போவேனே
இனி நீயும் நானும்
ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து
விண்மீன் விதையில்
நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில்
எனையே தொலைத்தேன்
மழையின் இசை கேட்டு
மலரே தலையாட்டு
மழலை மொழி போல
மனதில் ஒரு பாட்டு
பெண் &
இனி நீயும் நானும்
ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து
விண்மீன் விதையில்
நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில்
எனையே தொலைத்தேன்