Vinodhane |
---|
ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
ஆஆ ஆஆஅஆஅஆஅ
வினோதனே வினோதனே
விண்மீன்கள் தூங்கும் நேரத்தில்
உன் தோளில் தூங்குவேன்
வினோதனே வினோதனே
உன் பேரை சொல்லும் வேளையில்
உற்சாகம் கொள்ளுவேன்
குடையை மறந்த நேரத்தில்
கொட்டும் மழையை போலவே
மனதிலேகாதலின் சாரல் அடிக்கிறதே
வினோதனே வினோதனே
விண்மீன்கள் தூங்கும் நேரத்தில்
உன் தோளில் தூங்குவேன்
வினோதனே வினோதனே
உன் பேரை சொல்லும் வேளையில்
உற்சாகம் கொள்ளுவேன்
ஒவிய பெண்ணே தூரிகையாலே
சூரியன் என்னை சிறை எடுத்தாய்
மாபெரும் மலைகள்
ஆயினும் கூட மல்லிகை பூக்கள்
உடைத்திடுமே
உன்னை தினம் சுமப்பதால்
போதையில் பூமி சுற்றுதோ
உன்னை மனம் நினைப்பதால்
மயக்கம் பிறக்கின்றதோ
வினோதனே வினோதனே
விண்மீன்கள் தூங்கும் நேரத்தில்
உன் தோளில் தூங்குவேன்
விறகென இருந்தேன்
இதழ்களில் செதுக்கி
புல்லாங்குழலாய் இசைக்கின்றாய்
அழகே நீதான் அதிசய விளக்கு
அணைக்கும் போது எரிகின்றாய்
காதலின் ஜன்னல் கண்களே
கண்களில் காய்ச்சல் கொடுக்கின்றாய்
சேலையை நீ வீசியே
சிங்கத்தை பிடிக்கின்றாய்
வினோதனே வினோதனே
விண்மீன்கள் தூங்கும் நேரத்தில்
உன் தோளில் தூங்குவேன்
வினோதனே வினோதனே
உன் பேரை சொல்லும் வேளையில்
உற்சாகம் கொள்ளுவேன்
குடையை மறந்த நேரத்தில்
கொட்டும் மழையை போலவே
மனதிலேகாதலின் சாரல் அடிக்கிறதே
வினோதனா வினோதனா
விண்மீண்கள் தூங்கும் நேரத்தில்
உன் தோளில் தூங்குவேன்
வினோதனா வினோதனா
உன் பேரை சொல்லும் வேளையில்
உற்சாகம் கொள்ளுவேன்