Vizhigale Vizhigale Kavithai

Vizhigale Vizhigale Kavithai Song Lyrics In English


பாடகர் : எஸ் பி பாலசுப்ரமணியம்

பாடலாசிரியர் : வாலி



விழிகளே விழிகளே கவிதை ஒன்று புனையுங்கள் இமைகளே இமைகளே ஆனந்த கண்ணீரில் நனையுங்கள் இந்த பேரின்பம் ஏனின்று கேளுங்கள் என் பேர் சொல்ல ஓர் பிள்ளை பாருங்கள்

விழிகளே விழிகளே கவிதை ஒன்று புனையுங்கள்

பேசும் ஒரு தெய்வம் அந்த பிள்ளையல்லவா பிறக்கும் கொஞ்சி சிரிக்கும் கொடி முல்லையல்லவா மணிவிழி மரகத தீபம் அதில் ஒரு அபிநய பாவம் இரு உயிர் தழுவிய நேரம் இரவினில் எழுதிய கோலம் அந்த கஸ்தூரிமான் துள்ளி வாராதோ வரும் காலங்கள் நூறாண்டு வாராதோ


விழிகளே விழிகளே கவிதை ஒன்று புனையுங்கள்

என்னை எந்தன் பிள்ளை ஒரு தந்தையாக்கினான் ஹஹ இதயம் அது முழுதும் இன்பத் தேனை தேக்கினான் மடியினில் அவன் விளையாட மனதினில் மதுநதி கூட நிலவென முகவொளி வீச கிளியென ஒரு மொழி பேச அந்த சங்கீதம் நான் கேட்கும் நாளென்று அன்று சாய்ந்தாடும் பல்லாக்கு தோள் ஒன்று

விழிகளே விழிகளே கவிதை ஒன்று புனையுங்கள் இமைகளே இமைகளே ஆனந்த கண்ணீரில் நனையுங்கள் இந்த பேரின்பம் ஏனின்று கேளுங்கள் என் பேர் சொல்ல ஓர் பிள்ளை பாருஙகள்

விழிகளே விழிகளே கவிதை ஒன்று புனையுங்கள்