Vizhiye Vilakkondru |
---|
விழியே விளக்கொன்று ஏற்று
விழுந்தேன் உன் மார்பில் நேற்று
விளக்கேற்றும் மாலை
இது என்ன லீலை
விளங்காததா இனிமேல்
விழியே விளக்கொன்று ஏற்று
விழுந்தேன் உன் மார்பில் நேற்று
பூங்கூந்தலோ கார்மேகமோ
பூங்காற்றிலே ஊர்கோலமோ
ஓய்வின்றிக் காண்கின்ற ஆலிங்கனம்
உன்னோடு வாழ்கின்ற காதல் வரம்
என் கண்களில் உனை ரசித்தேன்
சிறை எடுத்தேன்
பொன் நெஞ்சிலே அனுதினமும்
இருக்க வைத்தேன்
நான் உன் உடல்
உயிர் நீதான்
நெஞ்சம் இது எந்தன் மஞ்சம்
விழியே விளக்கொன்று ஏற்று
விழுந்தேன் உன் மார்பில் நேற்று
விளக்கேற்றும் மாலை
இது என்ன லீலை
விளங்காததா இனிமேல்
நான் கேட்டது
தேன் பூ இதழ்
என் கண்மணி எங்கே பதில்
நான் கொண்ட யாவையும்
நீ சேரத்தான்
நீ தந்து என் பசி
நான் ஆறத்தான்
தேகம் இது ஒரு விருந்து
திருமருந்து
மோகங்களை அருகிருந்து
கொடுத்து விடு
பரிமாறினேன் பதம் ஆனேன்
பாவங்களில் பண்பாடினேன்
விழியே விளக்கொன்று ஏற்று
விழுந்தேன் உன் மார்பில் நேற்று
விளக்கேற்றும் மாலை
இது என்ன லீலை
விளங்காததா
இனிமேல்
விழியே விளக்கொன்று ஏற்று
விழுந்தேன் உன் மார்பில் நேற்று