Vizhiye Vilakkondru

Vizhiye Vilakkondru Song Lyrics In English


விழியே விளக்கொன்று ஏற்று
விழுந்தேன் உன் மார்பில் நேற்று

விளக்கேற்றும் மாலை
இது என்ன லீலை

விளங்காததா இனிமேல்

விழியே விளக்கொன்று ஏற்று
விழுந்தேன் உன் மார்பில் நேற்று

பூங்கூந்தலோ கார்மேகமோ
பூங்காற்றிலே ஊர்கோலமோ
ஓய்வின்றிக் காண்கின்ற ஆலிங்கனம்
உன்னோடு வாழ்கின்ற காதல் வரம்

என் கண்களில் உனை ரசித்தேன்
சிறை எடுத்தேன்
பொன் நெஞ்சிலே அனுதினமும்
இருக்க வைத்தேன்

நான் உன் உடல்
உயிர் நீதான்
நெஞ்சம் இது எந்தன் மஞ்சம்

விழியே விளக்கொன்று ஏற்று
விழுந்தேன் உன் மார்பில் நேற்று

விளக்கேற்றும் மாலை
இது என்ன லீலை

விளங்காததா இனிமேல்


நான் கேட்டது
தேன் பூ இதழ்
என் கண்மணி எங்கே பதில்

நான் கொண்ட யாவையும்
நீ சேரத்தான்
நீ தந்து என் பசி
நான் ஆறத்தான்

தேகம் இது ஒரு விருந்து
திருமருந்து
மோகங்களை அருகிருந்து
கொடுத்து விடு

பரிமாறினேன் பதம் ஆனேன்
பாவங்களில் பண்பாடினேன்

விழியே விளக்கொன்று ஏற்று
விழுந்தேன் உன் மார்பில் நேற்று

விளக்கேற்றும் மாலை
இது என்ன லீலை

விளங்காததா
இனிமேல்

விழியே விளக்கொன்று ஏற்று
விழுந்தேன் உன் மார்பில் நேற்று