Vizhiyilae |
---|
விழியிலே என்
விழியிலே கனவுகள்
கலைந்ததே உயிரிலே
நினைவுகள் தழும்புதே
கண்களில் கண்ணீர் வந்து
உன் பெயரையே எழுதுதே
முத்தமிட்ட உதடுகள்
உளறுதே
நான் என்னை
காணாமல் தினம்
உன்னை தேடினேன்
என் கண்ணீர் துளியில்
நமக்காக ஒரு மாலை
சூடினேன்
விழியிலே என்
விழியிலே கனவுகள்
கலைந்ததே உயிரிலே
நினைவுகள் தழும்புதே
இமைகளிலே
கனவுகளை விதைத்தேனே
ரகசியமாய் நீரூற்றி
வளர்த்தேனே
இன்று வெறும்
காற்றிலே நான் விரல்
நீட்டினேன் உன் கையோடு
கை சேரத்தான்
உன் உறவும்
இல்லை என் நிழலும்
இல்லை இனி என் காதல்
தொலை தூரம்தான்
நான் சாம்பல்
ஆனாலும் என் காதல்
வாழுமே அந்த சாம்பல்
மீதும் உனக்காக சில
பூக்கள் பூக்குமே
விழியிலே என்
விழியிலே கனவுகள்
கலைந்ததே உயிரிலே
நினைவுகள் தழும்புதே
உள்ளிருக்கும்
இதயத்துக்கு எனை
புரியும் யாருக்குத்தான்
நம் காதல் விடை தெரியும்
காதல் சிறகானது
இன்று சருகானது என் உள்
நெஞ்சம் உடைகின்றது
உன் பாதை
எது என் பயணம்
அது பனி திரை
ஒன்று மறைக்கின்றது
ஏன் இந்த சாபங்கள்
நான் பாவம் இல்லையா
விதி கண்ணாமூச்சி
விளையாட நான்
காதல் பொம்மையா
விழியிலே என்
விழியிலே கனவுகள்
கலைந்ததே உயிரிலே
நினைவுகள் தழும்புதே