Yaar Endru

Yaar Endru Song Lyrics In English


மற்றும் எஸ் பி சைலஜா

யார் என்று நீ அழைத்தாய் கவி பாட நான் எனையே இழந்தேன் எதை பாட நானிருந்தேன் அவனில் ஒரு காலம் நாயகன் பிரிந்ததும் நான் வெறும் தேகம்

யார் என்று நீ அழைத்தாய் கவி பாட நான் எனையே இழந்தேன் எதை பாட

என் மனக் கோயில் தெய்வமும் எங்கே என்னுயிர் ஜோதி போனது எங்கே காலமெல்லாம் அவளின் கனவோடு காத்திருப்பேன் வருவாள் குயில் பேடு

ஆதரவில்லை கொடி முல்லை மண் மேலே வேடர்கள் தொல்லை சிறு கிள்ளை சிறையானேன்

யார் என்று நீ அழைத்தாய் கவி பாட நான் எனையே மறந்தேன் எதை பாட


கானலை கண்டு காதல் கொள்ளாதே பாழ்பட்ட வீணை ராகம் தராதே முடிந்த கதை என்றும் தொடராது ஒடிந்த கிளை மரத்தில் இணையாது

ஊமையின் காதல் பொய்யென்று சொல்லாதே ஓர் முறை அன்பை கண்டாலும் வாழ்வேனே

யார் என்று நீ அழைத்தாய் கவி பாட நான் எனையே இழந்தேன் எதை பாட நானிருந்தேன் அவளில் ஒரு காலம் நாயகி பிரிந்ததும் நான் வெறும் தேகம்

யார் என்று நீ அழைத்தாய் கவி பாட நான் எனையே இழந்தேன் எதை பாட