Yaar Endru |
---|
மற்றும் எஸ் பி சைலஜா
யார் என்று நீ அழைத்தாய் கவி பாட நான் எனையே இழந்தேன் எதை பாட நானிருந்தேன் அவனில் ஒரு காலம் நாயகன் பிரிந்ததும் நான் வெறும் தேகம்
யார் என்று நீ அழைத்தாய் கவி பாட நான் எனையே இழந்தேன் எதை பாட
என் மனக் கோயில் தெய்வமும் எங்கே என்னுயிர் ஜோதி போனது எங்கே காலமெல்லாம் அவளின் கனவோடு காத்திருப்பேன் வருவாள் குயில் பேடு
ஆதரவில்லை கொடி முல்லை மண் மேலே வேடர்கள் தொல்லை சிறு கிள்ளை சிறையானேன்
யார் என்று நீ அழைத்தாய் கவி பாட நான் எனையே மறந்தேன் எதை பாட
கானலை கண்டு காதல் கொள்ளாதே பாழ்பட்ட வீணை ராகம் தராதே முடிந்த கதை என்றும் தொடராது ஒடிந்த கிளை மரத்தில் இணையாது
ஊமையின் காதல் பொய்யென்று சொல்லாதே ஓர் முறை அன்பை கண்டாலும் வாழ்வேனே
யார் என்று நீ அழைத்தாய் கவி பாட நான் எனையே இழந்தேன் எதை பாட நானிருந்தேன் அவளில் ஒரு காலம் நாயகி பிரிந்ததும் நான் வெறும் தேகம்
யார் என்று நீ அழைத்தாய் கவி பாட நான் எனையே இழந்தேன் எதை பாட