Yaar Purintha Pavam |
---|
யார் புரிந்த பாவம் இது யார் தலையில் விழுந்திடுமோ ஊரறிய முடியாமல் உண்மைதான் உறங்கிடுமோ
தாய் வடிவில் கோயில் கொண்ட தெய்வம்தான் வாராதோ வாய் திறந்து வழக்கில் நல்ல தீர்ப்பு ஒன்று கூறாதோ
யார் புரிந்த பாவம் இது யார் தலையில் விழுந்திடுமோ ஊரறிய முடியாமல் உண்மைதான் உறங்கிடுமோ
ஆசை வழி சென்றானே அவன் செய்த காரியமா தற்பெருமை கொண்டானே அவன் நடித்த நாடகமா
மூர்க்கனுக்கு உண்டான முன் கோபம் காரணமா மூவருக்குள் யாரம்மா அம்பிகையே கூறம்மா
தாய் வடிவில் கோயில் கொண்ட தெய்வம்தான் வாராதோ வாய் திறந்து வழக்கில் நல்ல தீர்ப்பு ஒன்று கூறாதோ
காதல் வரம் கிடைக்காமல் தவம் செய்யும் பூங்கொடியும் கல்யாணம் கொண்டாட அவன் நினைத்த பைங்கிளியும்
ஆளுக்கொரு திசையாக அலை பாயும் நாளம்மா மூவருக்குள் யாரம்மா அம்பிகையே கூறம்மா
யார் புரிந்த பாவம் இது யார் தலையில் விழுந்திடுமோ ஊரறிய முடியாமல் உண்மைதான் உறங்கிடுமோ
தாய் வடிவில் கோயில் கொண்ட தெய்வம்தான் வாராதோ வாய் திறந்து வழக்கில் நல்ல தீர்ப்பு ஒன்று கூறாதோ தீர்ப்பு ஒன்று கூறாதோ தீர்ப்பு ஒன்று கூறாதோ