Yaar Yaaro

Yaar Yaaro Song Lyrics In English


யார் யாரோ நான் பார்த்தேன்
யாரும் எனக்கு இல்லை
என் வழியில் நீ வந்தாய்
நானும் எனக்கு இல்லை

கண்ணீரில் கருவானேன்
கடல் நீரில் உருவானேன்
உன்னாலே உயிர் ஆனேன்
நீ ஆக நான் ஆனேன்
நீ ஆக நான் ஆனேன்

யார் யாரோ நான் பார்த்தேன்
யாரும் எனக்கு இல்லை

தாயை விடவும் நல்லவளாய்
தேவதை உன்னை பார்த்தேன்
எங்கோ செல்லும் சாலையிலே
உனக்குள் தங்கிவிட்டேன்

எனை யார் என கேட்டால்
ஒரு சொல் போதும்
நீ என நான் சொல்வேன்
என் முகவரி கேட்டால்
ஒரு வரி போதும்
உன் பெயர் நான் சொல்வேன்
உன்னை கடவுள் வந்து கேட்டாலும்
எதிர்ப்பேன் தரமாட்டேன்
எதிர்ப்பேன் தரமாட்டேன்

யார் யாரோ நான் பார்த்தேன்
யாரும் எனக்கு இல்லை


கோவம் ஓடும் நரம்புகளில்
வீணையை மீட்டுகிறாய்
எரியும் தீயாய் நான் இருந்தேன்
தீபம் ஏற்றுகிறாய்

அட இது வரை இங்கே
வாழ்ந்தது போதும்
என நான் இருந்திருந்தேன்
நீ வாழ்க்கையின் சுவையை
அறிந்திட வைத்தாய்
மறுபடி பிறந்துவிட்டேன்
உன்னை உயிரின் உள்ளே
நான் சுமப்பேன்
வெளியே விடமாட்டேன்
வெளியே விடமாட்டேன்

யார் யாரோ நான் பார்த்தேன்
யாரும் எனக்கு இல்லை
என் வழியில் நீ வந்தாய்
நானும் எனக்கு இல்லை

கண்ணீரில் கருவானேன்
கடல் நீரில் உருவானேன்
உன்னாலே உயிர் ஆனேன்
நீ ஆக நான் ஆனேன்
நீ ஆக நான் ஆனேன்

யார் யாரோ நான் பார்த்தேன்