Yaar Yaaro Enakku |
---|
யார் யாரோ
எனக்குப் போட்டி
நான் வந்தேன் கொடியை நாட்டி
இளையவன்
இனியவன் இசையிலே
எவருமே மயங்குவார் சபையிலே
யார் யாரோ
எனக்குப் போட்டி
சுரங்களைப் பிடித்து
லயங்களில் தொடுத்து
சுகங்களைக் கொடுக்கத்
தெரிந்தவன்
கலைகளை நினைத்து
கவலையை மறந்து
சிறகுகள் விரித்துப் பறந்தவன்
இதயம் மலர்ந்துவிட நினைவில்
எழுந்து வரும் புதிய நிலவே
இரவில் உறங்கி விடும் விழியில்
வளர்ந்து வரும் இனிய கனவே
பாடாத பாட்டெல்லாம்
நான் பாடுவேன் ஹே
வாங்காத பேரெல்லாம்
நான் வாங்குவேன்
புகழ் எனும்
வானில் நான் கதிரவன்
யார் யாரோ
எனக்குப் போட்டி
உடைகளும் எனக்கு
சுமை என இருக்கு
கொடியிடை துவண்டு நெளியுதே
பனி இதழ் வெளுக்க
மணி விழி சிவக்க
தளிருடல் கொதித்து உருகுதே
புதிய விரகம்
இது கொடிய நரகம் இது
மருந்து எதுவோ
இரவு தொடங்கியதும்
நிலவு கிளம்பியதும்
மயக்கம் வருதோ
நான் காட்டும்
ஜாடைகள் சொல்லாததா
கண்ணா உன் நெஞ்சென்ன
பொல்லாததா
ஒருதலை ராகமாய் இருக்குதே
யார் யாரோ
எனக்குப் போட்டி
நான் வந்தேன்
கொடியை நாட்டி