Yaarai Keattu |
---|
யாரைக் கேட்டு நீர்தான்
மேகம் சேர்ந்தது
யாரைக் கேட்டு தென்றல்
பூவைச் சேர்ந்தது
சேரும் வாழ்வின் நன்மை தீமை
யார்தான் சொல்வதோ
யாரைக் கேட்டு நீர்தான்
மேகம் சேர்ந்தது
யாரைக் கேட்டு தென்றல்
பூவைச் சேர்ந்தது
நெஞ்சோடு தூங்கிப்போன
ஆசைகள் ஓசைகள்
இந்நேரம் கண் விழித்து
பாக்குதோ பாக்குதோ
பஞ்சோடு தீயைக் கொண்டு
பக்கம் வைத்தான் தேவனே
ஒன்றோடு ஒன்றாய்ச் சேர்ந்து
ஒன்றிப் போகும் ஜீவனே
மீறாதோ காவல் ஆறாதோ ஆவல்
தோளோடு தோள் நான் சேரும் நாள்தான்
யாரைக் கேட்டு நீர்தான்
மேகம் சேர்ந்தது
யாரைக் கேட்டு தென்றல்
பூவைச் சேர்ந்தது
கையாலே காற்றைப் பிடிக்க
ஆகுமோ அடங்குமோ
நெய்யாலே நெருப்பை அணைக்கக்
கூடுமா குளிருமா
அம்மாடி ஆசை வேகம்
அணை போட்டால் கேட்குமா
ஆண் வாடை வீசும் போது
அச்சம் நாணம் பார்க்குமா
உன் மேனி காய
பாய் போட்டு சாய
போட்டானோ சொல்லு காமன் பாணம்
யாரைக் கேட்டு நீர்தான்
மேகம் சேர்ந்தது
யாரைக் கேட்டு தென்றல்
பூவைச் சேர்ந்தது
சேரும் வாழ்வின் நன்மை தீமை
யார்தான் சொல்வதோ
யாரைக் கேட்டு நீர்தான்
மேகம் சேர்ந்தது
யாரைக் கேட்டு தென்றல்
பூவைச் சேர்ந்தது