Yaararu Ennannuthan

Yaararu Ennannuthan Song Lyrics In English


யாராரு என்னான்னுதான்
சொல்றேன்டா கண்ணா
நாய் யாரு நரி யாரு
புரியாதோ சொன்னா

யாராரு என்னான்னுதான்
சொல்றேன்டா கண்ணா
நாய் யாரு நரி யாரு
புரியாதோ சொன்னா

கேட்டா கேட்டுக்கோடா
அட கேக்காட்டி கெட்டுப் போடா

யாராரு என்னான்னுதான்
சொல்றேன்டா கண்ணா
நாய் யாரு நரி யாரு
புரியாதோ சொன்னா

நாயப் போல காவலுக்கு நான் இருப்பேன்
நரியப் போல திருடன் வந்தா குரல் கொடுப்பேன்
ஆஞ்சனேய சாமியப் போல் நான் இருப்பேன்ராம் ராம்
ஆபத்துல ராமனுக்கு கை கொடுப்பேன்ராம் ராம் ராம்

தாய் குலத்தில் நல்ல பேர் கெடுக்க வந்த
பேய் குலத்த பாத்துப்புட்டா தீய வெப்பேன்

என்னை ஒரு பூனையின்னு
சொன்னதிலே குத்தம் இல்லே
ஏய்ச்சுத் தின்னும் எலிகளையே
புடிப்பதிலே பூனைதான்

யாராரு என்னான்னுதான்
சொல்றேன்டா கண்ணா
நாய் யாரு நரி யாரு
புரியாதோ சொன்னா

கேட்டா கேட்டுக்கோடா
அட கேக்காட்டி கெட்டுப் போடா

காக்கையின்னு என்ன சொன்ன மண்டுகளா
குடும்பத்தையே கொடைய வந்த வண்டுகளா
காக்கையப் போல் சேந்து வாழக் கத்துக்கணும்
கணக்குப் புள்ள எடுத்து சொன்னா ஒத்துக்கணும்


வாடகைக்கு புள்ள வாங்கியவ
இவ வீடு வாசல் சொத்துக்காக ஏங்கியவ

தாடகையின் தங்கை இவ
சூர்ப்பனக தோழி இவ
போக்கிரியா பொண்ணிருந்தா
மூக்கறுத்துப் போடுவேன்

யாராரு என்னான்னுதான்
சொல்றேன்டா கண்ணா
நாய் யாரு நரி யாரு
புரியாதோ சொன்னா

வீட்டுக்குள்ள குடி புகுந்த ஆந்தை இது
வெரட்டி விட ஆள் இல்லாம அலையிறது
ஆந்தை கூட பச்சோந்தியும் இருக்குறது
ஆளுக்கொரு நிறம் காட்டி நடிக்கிறது

எத்தனையோ இன்னும் இங்கிருக்கு
அட பித்தலாட்டம் பண்ணுறதில் பங்கிருக்கு

விட்டு வெச்சா வளந்து விடும்
காரியம்தான் கெட்டு விடும்
ஒட்டி ஒட்டி உடம்பு ரத்தம்
உறிஞ்சு தின்னும் அட்டைகளா

யாராரு என்னான்னுதான்
சொல்றேன்டா கண்ணா
நாய் யாரு நரி யாரு
புரியாதோ சொன்னா

இருவர் : கேட்டா கேட்டுக்கோடா
அட கேக்காட்டி கெட்டுப் போடா