Yaaridamum |
---|
இரு விழிகளும்
விழிகளும் இணைந்தன
இரு இமைகளும்
இமைகளும் திகைந்தன
ஒரு வேதியல் மாற்றம் நேருதே
தட்பம் வெட்பம் தடுமாறுதே
ஹேய்ஹேய் ஹேய்ஹேய்
மழை சாரலோ என் நெஞ்சிலே
சுகமாய் கீறலோ என் உயிரிலே
மழை சாரலோ என் நெஞ்சிலே
சுகமாய் கீறலோ என் உயிரிலே
இது கீறலா மழை சாரலா
இது காதலா இல்ல தேன் நிலா
இது மீறலாம் பரிமாறலாம்
இது காதலா கண் மோதலா
யாரிடமும்
தோன்றவில்லை இது போல்
நான் எனது ஏதும் இல்லை இனிமேல்
யாரிடமும்
தோன்றவில்லை இது போல்
நான் எனது ஏதும் இல்லை இனிமேல்
நான் கண்கள் மூடி பார்க்கிறேன்
ஒரு தென்றல் தீண்டி வேர்க்கிறேன்
நான் கண்கள் மூடியும் பார்க்கிறேன்
ஒரு தென்றல் தீண்டி வேர்க்கிறேன்
கார்மேகம் வந்து மோதியே
ஒரு விண்மீன் இன்று
சில்லு சில்லாய் சிதறுதே
ஒரு விண்மீன் இன்று
சில்லு சில்லாய் சிதறுதே
யாரிடமும்
தோன்றவில்லை இது போல்
நான் எனது ஏதும் இல்லை இனிமேல்
இது கீறலா மழை சாரலா
இது காதலா இல்ல தேன் நிலா
இது மீறலாம் பரிமாறலாம்
இது காதலா கண் மோதலா
மழை சாரலோ மழை சாரலோ
என் நெஞ்சிலே என் நெஞ்சிலே
சுகமாய் கீறலோ ஒரு கீறலோ
என் உயிரிலே
நான் அறியாமல் எனை ரசித்தாய்
என் மௌனங்களும் மொழி பெயர்த்தாய்
உன்னை கண்டபின்னே எந்தன்
பெண்மைகளும் உயிர் பெறுதே
கண்ணாமூச்சி ஆட்டம் போட்ட
வெட்கங்களும் வெளிவருதே
தரையினில் நின்ற போதும் மிதக்கிறேன்
அணைத்திட நீளும் கையை அடக்கினேன்
என்னை தந்து உன்னை வாங்க வந்தேனே
இளவேனில் காற்றின் வெட்பம் தாக்க நின்றேனே
யாரிடமும்
தோன்றவில்லை இது போல்
நான் எனது ஏதும் இல்லை இனிமேல்
யாரிடமும்
தோன்றவில்லை இது போல்
நான் எனது ஏதும் இல்லை இனிமேல்
நான் கனவுகளை கண்டதில்லை
கனவாய் யாரிடமும் சென்றதில்லை
முன்னே பின்னே பார்த்ததில்லை
இருந்தும் மனம் உன்னை நாட
முந்நூற் ஆண்டு ஒன்றை வாழ்ந்த
ஞாபகத்தில் தடுமாற
விரல்களின்
மோதிரங்கள் நீக்கினேன்
உன் விரல் தேடி வந்து
கோர்க்கிறேன்
இந்த சொல்லும்
இந்த கனவும் நிற்கட்டும்
நம்மை வானம் வந்து
ஈரக்கையால் வாழ்த்தட்டும்
யாரிடமும்
தோன்றவில்லை இது போல்
நான் எனது ஏதும் இல்லை இனிமேல்
நான் கண்கள் மூடி பார்க்கிறேன்
நான் கண்கள் மூடி பார்க்கிறேன்
ஒரு தென்றல் தீண்டி வேர்க்கிறேன்
ஒரு தென்றல் தீண்டி வேர்க்கிறேன்
நான் கண்கள் மூடி பார்க்கிறேன்
ஒரு தென்றல் தீண்டி வேர்க்கிறேன்
கார்மேகம் வந்து மோதியே
இது கீறலா மழை சாரலா
இது காதலா இல்ல தேன் நிலா
இது மீறலா பரிமாறலா
இது காதலா கண் மோதலா
ஒரு விண்மீன் இன்று
சில்லு சில்லாய் சிதறுதே
ஒரு விண்மீன் இன்று
சில்லு சில்லாய் சிதறுதே