Yaaro Neeyum Naanum |
---|
யாரோ நீயும் நானும் யாரோ
யாரோ தாயும் தந்தை யாரோ
யாரோ நீயும் நானும் யாரோ
யாரோ தாயும் தந்தை யாரோ
பல கோடி மாந்தரிலே
விளையாடும் வாழ்க்கையிலே
யாரோ நீயும் நானும் யாரோ
யாரோ தாயும் தந்தை யாரோ
கோட்டை கட்டும் ராஜாவுக்கு
பிள்ளை இல்லையாம்
குப்பைத் தொட்டி மட்டும்
ஒரு பிள்ளை ஈன்றதாம்
கண் இரண்டு காட்சி ஒன்று
கண் இரண்டு காட்சி ஒன்று
ரெண்டு கண்ணும் ரெண்டு பக்கம்
பார்க்கும் வண்ணம் செய்தாலென்ன
சொல்லுங்களேன்
யாரோ நீயும் நானும் யாரோ
யாரோ தாயும் தந்தை யாரோ
பாதை கண்டு நேரம் கண்டு
பயணம் செய்யுங்கள்
பாசம் உள்ள பிள்ளைக்கெல்லாம்
வாழ்த்துப் பாடுங்கள்
தாய் அறிவாள் மகன் குணத்தை
தாய் அறிவாள் மகன் குணத்தை
தாயும் இன்றி தந்தை இன்றி
வாழும் பிள்ளை எங்கே செல்லும்
சொல்லுங்களேன்
யாரோ நீயும் நானும் யாரோ
யாரோ தாயும் தந்தை யாரோ