Yaarodu Yaar Endra Kelvi

Yaarodu Yaar Endra Kelvi Song Lyrics In English


யாரோடு யாரென்ற கேள்வி
விதி வந்து விடை சொல்லுமா
கடலோடு நதிகூட காயும்
என் கண்ணீர் காயாதம்மா

யாரோடு யாரென்ற கேள்வி
விதி வந்து விடை சொல்லுமா
கடலோடு நதிகூட காயும்
என் கண்ணீர் காயாதம்மா

நேற்று என் நெஞ்சில் பூ வைத்தவள்
இன்று என் நெஞ்சில் தீ வைப்பதா
நேற்று என் வீட்டில் பால் வைத்தவள்
நாளை வாழ்வுக்கு நாள் வைப்பதா

நிழல் தேடி வந்தாள்
நிஜமாகினாள்
நிஜம் வந்த நேரம் நிழலாகினாள்
கண்ணோடு சேர்த்தேன் கனவாக ஆனாள்

யாரோடு யாரென்ற கேள்வி
விதி வந்து விடை சொல்லுமா
கடலோடு நதிகூட காயும்
என் கண்ணீர் காயாதம்மா


மீன்கள் எப்போதும் தண்ணீரிலே
ஞானம் இப்போது கண்ணீரிலே
கால்கள் எப்போதும் கண்போக்கிலே
காதல் எப்போதும் பெண்போக்கிலே

மேகங்கள் இல்லா வானம் உண்டு
சோகங்களில்லா வாழ்வும் உண்டா
அலையில்லை என்னும் கடலொன்று உண்டா

யாரோடு யாரென்ற கேள்வி
விதி வந்து விடை சொல்லுமா
கடலோடு நதிகூட காயும்
என் கண்ணீர் காயாதம்மா போது