Yaarparthadhu |
---|
யார் பார்த்தது வானில் பூரணம்
யார் வாழ்ந்தது வாழ்க்கை யாவையும்
நாம் வந்தது சென்று சேரவே
கண் நீரினில் நன்றி கூறவே
ஓசைகள் உயிர் ஓசைகள்
உண்மை நெஞ்சில் ஒளி ஏற்றுமே
பாசமே அது போதுமே
அன்பின் வண்ணம் நம்மை தீட்டுமே
நாம் காற்றிடம் மூச்சை வாங்கினோம்
நாள் தீர்ந்ததும் தந்து போகிறோம்
சொந்த உறவோ
வந்த உறவோ
சகலமும் மாயம்
இந்த பொழுதே
இந்த நொடியும்
இருவரும் போய் சேரும்
அன்பு மனங்கள்
கொண்ட விரல்கள்
தலையினை கோதும்
வெள்ளை மனதில்
வேறு நிறங்கள்
இணைவதும் ஊர் சாபம்
வாசம் தரும் வார்த்தை
அதை யார்தான் அறிவார்
பேசும் குயில் நேசம்
அதை யார்தான் வரைவார்
நதியிலே இலையென
பயணம் நாம் போகிறோம்
கரைகளின் மரங்களை
விடை நாம் கூறினோம்
எளியஉயிர்கள்போய் சேர்கிறோம்
யார் பார்த்தது வானில் பூரணம்
யார் வாழ்ந்தது வாழ்க்கை யாவையும்
நாம் வந்தது சென்று சேரவே
கண் நீரினில் நன்றி கூறவே
ஓசைகள் உயிர் ஓசைகள்
உண்மை நெஞ்சில் ஒளி ஏற்றுமே
பாசமே அது போதுமே
அன்பின் வண்ணம் நம்மை தீட்டுமே
நாம் காற்றிடம் மூச்சை வாங்கினோம்
நாள் தீர்ந்ததும் தந்து போகிறோம்