Yaarukku Naan Theengu Seythen

Yaarukku Naan Theengu Seythen Song Lyrics In English


யாருக்கு நான் தீங்கு செய்தேன்
இறைவாஆஆ
நாட்டில் யார் குடியை நான் கெடுத்தேன்
இறைவாஆ
ஊருக்கு நான் என்ன செய்தேன்
இறைவாஆஆ
என்னை உனக்குக்கூடப் பிடிக்கல்லையா
இறைவாஆஆ

யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா
நாட்டில் யார் குடியை நான் கெடுத்தேன் இறைவா
யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா
நாட்டில் யார் குடியை நான் கெடுத்தேன் இறைவா

ஊருக்கு நான் என்ன செய்தேன் இறைவா
ஊருக்கு நான் என்ன செய்தேன் இறைவா
என்னை உனக்குக்கூடப் பிடிக்கல்லையா இறைவா

யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா
நாட்டில் யார் குடியை நான் கெடுத்தேன் இறைவா

மக்கள் கூடும் மண்டபத்தை
நான் இடித்தேனாஆ
மக்கள் கூடும் மண்டபத்தை நான் இடித்தேனா
நீதி மன்றத்தில் பொய்யுரைத்து நெறி மறந்தேனா
கற்றவர் மேல் பழி உரைத்துக் கலங்க வைத்தேனா
கற்றவர் மேல் பழி உரைத்துக் கலங்க வைத்தேனா
ஒரு கடவுள் இல்லையென்று சொல்லி கருத்தழிந்தேனாஆ
கருத்தழிந்தேனா

யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா
நாட்டில் யார் குடியை நான் கெடுத்தேன் இறைவா


குழந்தை உண்ணும் பாலினிலே
விஷங்கலந்தேனாஆ
குழந்தை உண்ணும் பாலினிலே விஷங்கலந்தேனா
ஏழை குடியிருக்கும் குடிசைகளைப் பிரித்தெறிந்தேனா
கொடுத்த கடன் இல்லையென்று மருத்துரைத்தேனா
கொடுத்த கடன் இல்லையென்று மருத்துரைத்தேனா
நாளும் கொலை புரியும் பாவிகட்டுக் கொடிப்பிடித்தேனாஆஅ
கொடிப்பிடித்தேனா

யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா
நாட்டில் யார் குடியை நான் கெடுத்தேன் இறைவா
ஊருக்கு நான் என்ன செய்தேன் இறைவா
என்னை உனக்குக்கூடப் பிடிக்கல்லையா இறைவா

யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவாஆ