Yaarukku Yaar Endru Theriyaadha

Yaarukku Yaar Endru Theriyaadha Song Lyrics In English


ஆஹாஆஹாஆஹாஆஅஹா
யாருக்கு யார் என்று தெரியாதா
இந்த ஊருக்கு உண்மை புரியாதா
யாருக்கு யார் என்று தெரியாதா
இந்த ஊருக்கு உண்மை புரியாதா
யாருக்கு யார் என்று தெரியாதா

திருமண மேடையைத் தேடி வந்தேன்
என் தலைவன் திருவடி நாடி வந்தேன்
திருமண மேடையைத் தேடி வந்தேன்
என் தலைவன் திருவடி நாடி வந்தேன்
திருமண மேடையைத் தேடி வந்தேன்

இமைகள் மூடிய கண்ணாக
இதயம் தேடிய பெண்ணாக

ஓஹோ ஓஹோ ஓஹோஹஓஹோ

இமைகள் மூடிய கண்ணாக
இதயம் தேடிய பெண்ணாக
இரவாய் பகலாய் நீ இருக்க
இரவாய் பகலாய் நீ இருக்க
உறவாய் உயிராய் நானிருப்பேன்
ஆஹஹா ஓஹோஹஓஹோ
யாருக்கு யார் என்று தெரியாதா

ஊரார் வார்த்தையை கேட்காமல்
உற்றார் முகத்தைப் பார்க்காமல்
ம்ஹும் ம்ஹும் ம்ஹும்

ஊரார் வார்த்தையை கேட்காமல்
உற்றார் முகத்தைப் பார்க்காமல்
நேராய் நெஞ்சில் நின்றவரே
நினைவால் என்னை வென்றவரே
அஹா ஹ்ம்ம் ஓ ஓ ஓ ஓ ஹ்ம்ம்
யாருக்கு யார் என்று தெரியாதா


பருவம் என்றொரு பொழுது வரும்
பாவை என்றொரு தேவை வரும்
பருவம் என்றொரு பொழுது வரும்
பாவை என்றொரு தேவை வரும்

உருவம் என்றொரு அழகு வரும்
உருவம் என்றொரு அழகு வரும்
ஒவ்வொரு நாளும் பழக வரும்

பழகும் வரையில் தயக்கம் வரும்
பழகிய பின்னும் மயக்கம் வரும்
பழகும் வரையில் தயக்கம் வரும்
பழகிய பின்னும் மயக்கம் வரும்

காதல் காவலைக் கடந்து வரும்
காலங்கள் தோறும் தொடர்ந்து வரும்
ஆஹா
ஹ்ம்ம்
ஓ ஓ ஓ ஓ
ஹ்ம்ம்ம்

இருவர் : யாருக்கு யார் என்று தெரியாதா
இந்த ஊருக்கு உண்மை புரியாதா
யாருக்கு யார் என்று தெரியாதா
ஹாஹாஹஹா