Yaarum Thodadha Ondrai |
---|
யாரும் தொடாத ஒன்றை
ஏதோ முதல் முறை தொடுகிறதே
நானா நநன நானா நானான நா நா
என்னுள் இல்லாத ஒன்றை
எதுவோ எனக்குள் தருகிறதே
நானா நநன நானா நானான நா நா
அம்மம் மம்மம் மா என்னுள் என்ன
ஆனந்தம்மாய் மின்னல் மின்ன
தேடி வந்தேன் ஓஹோ கவிதை கண்களோடு
நாடி வந்தேன் ஓஹோ நதியின் கால்களோடு
நதியின் கால்களோடு
யாரும் தொடாத ஒன்றை
ஏதோ முதல் முறை தொடுகிறதே
நானா நநன நானா நானான நா நா
என்னுள் இல்லாத ஒன்றை
எதுவோ எனக்குள் தருகிறதே
நானா நநன நானா நானான நா நா
சிலுசிலு நதி அலை வந்து
என்னை செல்லமாகத் தொடுதே
அது அது சுகம் தரவில்லை
உயிர் தீயைத் தீண்டி விடுதே
இரவினில் பகல் ஒன்று வருதே
என் நினைவில் கனவும் விழுதே
உறங்கவும் விழிக்கவும் மறந்து
என் உலகம் சுழலுகிறதே
பூமி மேலே அல்ல எந்தன் பாதம்
கைக்கெட்டும் தூரத்தில் வர்ண மேகம்
காகிதம் காகிதம் ஒன்று
மெல்ல ஓவியம் ஆனது இன்று
மின்மினி மின்மினி ஒன்று
புதுப் பௌர்ணமி ஆனது இன்று
என்ன மாயம் ஓஹோ
மனதை திறந்து வைத்தேன்
வயதை பூட்டி வைத்தேன்
யாரும் தொடாத ஒன்றை
ஏதோ முதல் முறை தொடுகிறதே
நானா நநன நானா நானான நா நா
என்னுள் இல்லாத ஒன்றை
எதுவோ எனக்குள் தருகிறதே
நானா நநன நானா நானான நா நா
பனித் துளி பனித் துளிக்குள்ளே
நான் மூழ்கிப் போனதென்ன
பறவையின் சிறகுகள் மோதி
நான் மேகம் ஆனதென்ன
இதயத்தை இதயத்தை மெதுவாய்
சுற்றி நெருப்புப் பந்து உருள
இலவச இணைப்புகள் அதுவாய்
சில இம்சை வந்து பரவ
யாரங்கே சொல் எந்தன் நெஞ்சின் உள்ளே
சொல்லாமல் சென்றாயே சுவாசம் போலே
ஐக்கியம் ஆனது கொஞ்சம்
அட பைத்தியம் ஆனதும் கொஞ்சம்
சொன்னது சொன்னது கொஞ்சம்
இன்னும் சொல்லிட ஏங்குது நெஞ்சம்
நீயும் நானும் ஓஹோ
நடக்கும் புதிய காற்று
தெறிக்கும் இசையின் ஊற்று
யாரும் தொடாத ஒன்றை
ஏதோ முதல் முறை தொடுகிறதே
நானா நநன நானா நானான நா நா
என்னுள் இல்லாத ஒன்றை
எதுவோ எனக்குள் தருகிறதே
நானா நநன நானா நானான நா நா
அம்மம் மம்மம் மா என்னுள் என்ன
ஆனந்தம்மாய் மின்னல் மின்ன
தேடி வந்தேன் ஓஹோ கவிதை கண்களோடு
நாடி வந்தேன் ஓஹோ நதியின் கால்களோடு
நதியின் கால்களோடு
யாரும் தொடாத ஒன்றை
ஏதோ முதல் முறை தொடுகிறதே
நானா நநன நானா நானான நா நா
என்னுள் இல்லாத ஒன்றை
எதுவோ எனக்குள் தருகிறதே
நானா நநன நானா நானான நா நா