Yaarum Thodadha Ondrai

Yaarum Thodadha Ondrai Song Lyrics In English


யாரும் தொடாத ஒன்றை
ஏதோ முதல் முறை தொடுகிறதே
நானா நநன நானா நானான நா நா
என்னுள் இல்லாத ஒன்றை
எதுவோ எனக்குள் தருகிறதே
நானா நநன நானா நானான நா நா

அம்மம் மம்மம் மா என்னுள் என்ன
ஆனந்தம்மாய் மின்னல் மின்ன
தேடி வந்தேன் ஓஹோ கவிதை கண்களோடு
நாடி வந்தேன் ஓஹோ நதியின் கால்களோடு
நதியின் கால்களோடு

யாரும் தொடாத ஒன்றை
ஏதோ முதல் முறை தொடுகிறதே
நானா நநன நானா நானான நா நா
என்னுள் இல்லாத ஒன்றை
எதுவோ எனக்குள் தருகிறதே
நானா நநன நானா நானான நா நா

சிலுசிலு நதி அலை வந்து
என்னை செல்லமாகத் தொடுதே
அது அது சுகம் தரவில்லை
உயிர் தீயைத் தீண்டி விடுதே

இரவினில் பகல் ஒன்று வருதே
என் நினைவில் கனவும் விழுதே
உறங்கவும் விழிக்கவும் மறந்து
என் உலகம் சுழலுகிறதே

பூமி மேலே அல்ல எந்தன் பாதம்
கைக்கெட்டும் தூரத்தில் வர்ண மேகம்

காகிதம் காகிதம் ஒன்று
மெல்ல ஓவியம் ஆனது இன்று
மின்மினி மின்மினி ஒன்று
புதுப் பௌர்ணமி ஆனது இன்று

என்ன மாயம் ஓஹோ
மனதை திறந்து வைத்தேன்
வயதை பூட்டி வைத்தேன்

யாரும் தொடாத ஒன்றை
ஏதோ முதல் முறை தொடுகிறதே
நானா நநன நானா நானான நா நா
என்னுள் இல்லாத ஒன்றை
எதுவோ எனக்குள் தருகிறதே
நானா நநன நானா நானான நா நா


பனித் துளி பனித் துளிக்குள்ளே
நான் மூழ்கிப் போனதென்ன
பறவையின் சிறகுகள் மோதி
நான் மேகம் ஆனதென்ன

இதயத்தை இதயத்தை மெதுவாய்
சுற்றி நெருப்புப் பந்து உருள
இலவச இணைப்புகள் அதுவாய்
சில இம்சை வந்து பரவ

யாரங்கே சொல் எந்தன் நெஞ்சின் உள்ளே
சொல்லாமல் சென்றாயே சுவாசம் போலே

ஐக்கியம் ஆனது கொஞ்சம்
அட பைத்தியம் ஆனதும் கொஞ்சம்
சொன்னது சொன்னது கொஞ்சம்
இன்னும் சொல்லிட ஏங்குது நெஞ்சம்

நீயும் நானும் ஓஹோ
நடக்கும் புதிய காற்று
தெறிக்கும் இசையின் ஊற்று

யாரும் தொடாத ஒன்றை
ஏதோ முதல் முறை தொடுகிறதே
நானா நநன நானா நானான நா நா
என்னுள் இல்லாத ஒன்றை
எதுவோ எனக்குள் தருகிறதே
நானா நநன நானா நானான நா நா

அம்மம் மம்மம் மா என்னுள் என்ன
ஆனந்தம்மாய் மின்னல் மின்ன
தேடி வந்தேன் ஓஹோ கவிதை கண்களோடு
நாடி வந்தேன் ஓஹோ நதியின் கால்களோடு
நதியின் கால்களோடு

யாரும் தொடாத ஒன்றை
ஏதோ முதல் முறை தொடுகிறதே
நானா நநன நானா நானான நா நா
என்னுள் இல்லாத ஒன்றை
எதுவோ எனக்குள் தருகிறதே
நானா நநன நானா நானான நா நா