Yaavum Ingu

Yaavum Ingu Song Lyrics In English


அன்பே மழையாய்
பொழிந்தவனே
உன் அத்தனை செல்லிலும் நானிருந்தேன்
கண்ணே மணியே கலங்கிடுதே
நான் இன்னுமும் எங்கனம் வாழ்ந்திடுவேன்

காலம் தந்தா கொடையாக
என் கேள்விகெல்லாம் விடையாக
சேர்ந்த தெய்வம்
நீ அன்றோ நீ அன்றோ

யாவும் இங்கு நீதானே
அப்பா அப்பா
நீயில்லாமல் நான் ஏது
அப்பா அப்பா

யாவும் இங்கு நீதானே
அப்பா அப்பா
நீயில்லாமல் நான் ஏது
அப்பா அப்பா

கங்கை நீரும்
புனிதம் என்று
நம்பும் கூட்டம் உண்டு
வைகை ஆறும் அமுதம் என்று
பேசும் ஆட்கள் உண்டு

தந்தை சிந்தும்
வேர்வை போல
என்ன உண்டு பூமியில்
தாயின் பாலை விடவும் அதற்கே
சக்தியுண்டு உண்மையில்

அப்பா உன்போல் யாரும் இல்லை
உன்னை பிரிந்தால் நானே இல்லை

யாவும் இங்கு நீதானே
அப்பா அப்பா
நீயில்லாமல் நான் ஏது
அப்பா அப்பா


யாவும் இங்கு நீதானே
அப்பா அப்பா
நீயில்லாமல் நான் ஏது
அப்பா அப்பா

சிங்கம் போல சிரிக்கும் உன்னை
பேசிட வார்த்தை இல்லை
சிந்திடாமல் உன்னை நான் நெஞ்சில்
ஏந்திட ஏது தொல்லை

நிலவை காட்டி சோறை ஊட்ட
தாயில்லாத போதிலும்
நிலவை போல நீயே இருந்தாய்
அமாவாசை நாளிலும்

அப்பா உன்போல் யாரும் இல்லை
உன்னை பிரிந்தால் நானே இல்லை

யாவும் இங்கு நீதானே
அப்பா அப்பா
நீயில்லாமல் நான் ஏது
அப்பா அப்பா

யாவும் இங்கு நீதானே
அப்பா அப்பா
நீயில்லாமல் நான் ஏது
அப்பா அப்பா