Yaen Ingu Vandhaan

Yaen Ingu Vandhaan Song Lyrics In English


ஏன் இங்கு வந்தான்
பேசாதே என்றான்
செல் என்று சொன்னேன்
என்னுள்ளே சென்றான்

உறங்கி கிடந்த புலன்களை எல்லாம்
எழுப்பி விடுகின்றான்
சிறிது சிறிதாய் கிறக்கங்கள் எல்லாம்
கிளப்பி விடுகின்றான்

பூவும் திறக்கும் நொடியின் முன்னே
தேனை எடுக்கின்றான்
ஓஹ் ஹோ ஹோ
காதல் பிறக்கும் நொடியின் முன்னே
காமம் கொடுக்கின்றான்

ஏன் இங்கு வந்தான்
ஏன் இங்கு வந்தான்
பேசாதே என்றான்
பேசாதே என்றான்
ஓஓஹோ
செல் என்று சொன்னேன்
செல் என்று சொன்னேன்
என்னுள்ளே சென்றான்
என்னுள்ளே சென்றான்



என் அழகை ரசிக்கிறான்
ஓஓ ஹோ
என் இளமை ருசிக்கிறான்
ஓஓ ஹோ
என் இடையின் சரிவிலே
மழை துளியென உருள்கின்றான்

என் தோளினில் மெதுவாய் அமர்ந்தான்
என் கோபத்தில் மதுவாய் சுவைத்தான்
என் கண்களின் சிவப்பினை அழகினில் ஏந்தி
கன்னத்தில் பூசுகின்றான்


விடிய விடிய இரவினை வடித்தேன்
குடிக்க செய்தானே ஓஓஹோ
கொடிய கொடிய வழிகளை கூட
பிடிக்க செய்தானே

ஏன் இங்கு வந்தான்
ஏன் இங்கு வந்தான்
பேசாதே என்றான்
பேசாதே என்றான்
ஓஓஹோ
செல் என்று சொன்னேன்
செல் என்று சொன்னேன்
என்னுள்ளே சென்றான்
என்னுள்ளே சென்றான்

நான் ஒளியில் நடக்கிறேன்
ஓஓ ஹோ
என் நிழலாய் தொடர்கிறான்
ஓஓ ஹோ
என் விளக்கை அணைக்கிறேன்
என் இருலென படர்கின்றான்

முன் அனுமதி இன்றி நுழைந்தான்
என் அறையினில் எங்கும் நிறைந்தான்
இது முறை இல்லை
பெண் மற்றும் என்றேன்
வரையறை
பெண் மற்றும் இன்றி
எனை அவன்
பெண் மற்றும் சிறை பிடித்தான்

சிறையினுள்ளே சிறகுகள் தந்து
பறக்க செய்தானே ஓஓஓஹோ
கனவும் நெனவும் தொடும் ஒரு இடத்தில்
இருக்க செய்தானே

ஏன் இங்கு வந்தான்
ஏன் இங்கு வந்தான்
பேசாதே என்றான்
பேசாதே என்றான்
ஓஓஹோ
செல் என்று சொன்னேன்
செல் என்று சொன்னேன்
என்னுள்ளே சென்றான்
என்னுள்ளே சென்றான்