Yaereduthu Yaereduthu

Yaereduthu Yaereduthu Song Lyrics In English


வாழ இலை பரப்பி வச்சு ஆஆஆஹ்பரப்பி வச்சு பொரிக்கடல நெரப்பி வச்சு ஆஆஆஹ்நெரப்பி வச்சு

வத்திகள ஏத்தி வச்சு ஆஆஆஹ்ஏத்தி வச்சு முழுத் தேங்கா ஒடச்சி வச்சு ஆஆஆஆஹ்ஒடச்சு வச்சு

ஏழ மக பூச வச்சா ஏத்துக்கணும் நிலமகளே இட்ட விதை நெல்மணியா ஆக்கித் தரும் குலமகளே

லுலுலுலுலுலுலுலு

ஏரெடுத்து ஏரெடுத்து பாடு படு பாடு படு ஏரக் கொண்டு ஊருக்கெல்லாம் சோறு கொடு சோறு கொடு

பாடுபட்டா பொன் வெளயும் பூமியிது பூமியிது பூமியத்தான் மிஞ்சுகிற சாமியேது சாமியேது

இந்தக் காணி நெலம்தான் நாம கேட்ட வரந்தான் என்றும் இல்லையென்று சொல்லாமல் தான் அள்ளிக் கொடுக்கும்

ஏரெடுத்து ஏரெடுத்து பாடு படு பாடு படு ஏரக் கொண்டு ஊருக்கெல்லாம் சோறு கொடு சோறு கொடு

வெதச்சதெல்லாம் மொளச்சு வரும் நேரம் நேரம் பொறந்திருச்சு நமக்கு நல்ல யோகம் யோகம் ஒழைக்கிறவன் பெருமையெல்லாம் ஊரே பேசும் உழவனுங்க இளச்சுபுட்டா ஏது தேசம்

பட்டணத்து மக்களெல்லாம் சோத்துதலதான் கைய வைக்க பட்டிக்காட்டு சுப்பன் குப்பன் சேத்துதலதான் கால வைப்பான்

எந்நாளுமே ஏர் புடிச்சா எல்லாருமே சேர்ந்துழைச்சா வந்திடும் நெல்லுமணி மின்னிடும் பொன்னுமணி


ஆண் மற்றும் ஏரெடுத்து ஏரெடுத்து பாடு படு பாடு படு ஏரக் கொண்டு ஊருக்கெல்லாம் சோறு கொடு சோறு கொடு

ஆண் மற்றும் இந்தக் காணி நெலம்தான் நாம கேட்ட வரந்தான் என்றும் இல்லையென்று சொல்லாமல் தான் அள்ளிக் கொடுக்கும்

ஆண் மற்றும் ஏரெடுத்து ஏரெடுத்து பாடு படு பாடு படு ஏரக் கொண்டு ஊருக்கெல்லாம் சோறு கொடு சோறு கொடு

ஆஆஆஆஹ்ஆஹ்ஆஹ்

குறுவை எல்லாம் அறுவடைக்கு ஏங்கும் நேரம் கறுக்கருவா எடுத்துக்கிட்டு வாங்க யாரும் கதிரடிச்சு களத்துலதான் ஓரம் சேர்த்து பதரிருந்தா மொறதுலத்தான் காற்றில் தூத்து

பக்குவமா மூட்டக் கட்டி பாரவண்டி ஏத்திவிடு பக்கத்தூரு சந்தையிலே வித்துப்போட்டு காச எடு தேனாறுந்தான் ஆடி வரும் பாலாறுந்தான் ஓடி வரும் வாங்கடி ருக்குமணி பஞ்சங்கள் இல்லையினி

ஏரெடுத்து ஏரெடுத்து பாடு படு பாடு படு ஏரக் கொண்டு ஊருக்கெல்லாம் சோறு கொடு சோறு கொடு

இந்தக் காணி நெலம்தான் நாம கேட்ட வரந்தான் என்றும் இல்லையென்று சொல்லாமல் தான் அள்ளிக் கொடுக்கும்

ஆண் மற்றும் ஏரெடுத்து ஏரெடுத்து பாடு படு பாடு படு ஏரக் கொண்டு ஊருக்கெல்லாம் சோறு கொடு சோறு கொடு

ஆண் மற்றும் பாடுபட்டா பொன் வெளையும் பூமியிது பூமியிது பூமியத்தான் மிஞ்சுகிற சாமியேது சாமியேது