Yaetriya Deepam Eriya Vidu |
---|
பாடகி : வாணி ஜெய்ராம்
பாடலாசிரியர் : வாலி
ஏற்றிய தீபம் எரிய விடு எரிகின்ற மனதை குளிரவிடு ஏற்றிய தீபம் எரிய விடு எரிகின்ற மனதை குளிரவிடு
மகர விளக்குகள் ஆயிரம் ஏற்றிய கோயில் உன் கோயிலன்றோ அதில் நானொரு தீபமன்றோ மகர விளக்குகள் ஆயிரம் ஏற்றிய கோயில் உன் கோயிலன்றோ அதில் நானொரு தீபமன்றோ
இது யார் செய்த பாவம் என் மேல் என்ன கோபம் எதுவும் அறியேன் துணை உன் பாதம் ஐயா
வரும் துன்பங்கள் தீர்ப்பாய் என் மாங்கல்யம் காப்பாய் சரணம் சரணம் எனும் உன் நாமம் பொய்யா
கண்ணீரில் நான் செய்யும் ஆராதனை மணிகண்டா என் வாழ்வோடு ஏன் சோதனை கண்ணீரில் நான் செய்யும் ஆராதனை மணிகண்டா என் வாழ்வோடு ஏன் சோதனை
ஏற்றிய தீபம் எரிய விடு எரிகின்ற மனதை குளிரவிடு
ஒரு பெண் என்னும் ஜென்மம் இது எந்நாளும் துன்பம் கணவன் பழியால் சுமை நான் தாங்கி நின்றேன் உன் பாதங்கள் போற்றும் என் செந்தூரம் வேண்டும் அதுதான் தினமும் உனை நான் வேண்டி வந்தேன்
பூவோட விளையாட பூகம்பமா என் பூஜைக்கு பதிலென்ன உன் மௌனமா
ஏற்றிய தீபம் எரிய விடு எரிகின்ற மனதை குளிரவிடு மகர விளக்குகள் ஆயிரம் ஏற்றிய கோயில் உன் கோயிலன்றோ அதில் நானொரு தீபமன்றோ
தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் செய்த சகல குற்றங்களையும் பிழைகளையும் பொறுத்து காத்து ரட்சித்து அருள வேண்டும்
ஓம் சத்தியமாய பொன்னு பதினெட்டாம் படி மேல் வாழும் ஓம் ஹரிஹர சுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப ஸ்வாமியே சரணம் ஐயப்பா