Yamirukka Bayamen Endru |
---|
யாமிருக்க பயமேன் என்று
சொன்னவன் முருகன்
நாளும் நாமழைக்க வருவான்
எங்கள் மன்னவன் குமரன்
யாமிருக்க பயமேன் என்று
சொன்னவன் முருகன்
நாளும் நாமழைக்க வருவான்
எங்கள் மன்னவன் குமரன்
காற்சதங்கை கொஞ்ச கொஞ்ச
ஆடிய பாவை
மீண்டும் கால் விளங்க கந்தன் அருளை
வேண்டிடும் வேளை
யாமிருக்க பயமேன் என்று
சொன்னவன் முருகன்
நாளும் நாமழைக்க வருவான்
எங்கள் மன்னவன் குமரன்
உன் சன்னதி அல்லாமல் சபைகளில் ஆடாத
பொன்னடி இதுவென்று புரியாதோ
வடிவேலனை அல்லாமல் வேறேதும் காணாத
வஞ்சியும் இவளென்று தெரியாதோ
வஞ்சியும் இவளென்று தெரியாதோ
யாமிருக்க பயமேன் என்று
சொன்னவன் முருகன்
நாளும் நாமழைக்க வருவான்
எங்கள் மன்னவன் குமரன்
உன் பொற்பாதம் தினம் போற்றி
அருணகிரி வேண்ட
அற்புத நடம் செய்த பெருமானே
உன் பொற்பாதம் தினம் போற்றி
அருணகிரி வேண்ட
அற்புத நடம் செய்த பெருமானே
நல் ஆடலின் கோலங்கள் அபிநய ஜாலங்கள்
யாவையும் அறிந்தாயே பெம்மானே
சேய் கொண்ட நோய் தீர்க்க மனமில்லையோ
நீ செந்தூரில் செய்த நடம் நினைவில்லையோ
சேய் கொண்ட நோய் தீர்க்க மனமில்லையோ
நீ செந்தூரில் செய்த நடம் நினைவில்லையோ
துந்துபி நாட்டியம் தாளம் எழுப்பிட
ஓமெனும் ஓசை வர
தும்புரு நாரதர் தேவக குலத்தவர்
கீர்த்தனம் பாடி வர
கிண்கிணி மேகலை குலுங்க குலுங்க
இசைக் கோலங்கள் கொண்டாவே
திருப்பாதம் அசைந்து வர
பரதம் அழகு பெற
பயிலும் நடனம் இதுவோ
நர்த்தன வேளையில் விழியின் வழி பல
பாவங்கள் உண்டாகவே அதில்
கான ரசம் வழிய ஞான மழை பொழியும்
அழகன் முருகன் இவனோ
அழகன் முருகன் இவனோ
திரு நடனம் புரியும் குகனோ
அழகன் முருகன் இவனோ
அழகன் முருகன் இவனோ