Yamma Yamma |
---|
ஆஹா ஹாஹா
ஆஹா அஹாஹா
ஆஹஆஹாஹா
யம்மா யம்மா தள்ளிச் செல்லு
எங்கே எல்லை அங்கே நில்லு
சொல்லாமல் நீ தீண்டினால்
எல்லைக் கோட்டை தாண்டினால்
உன் தாபம்தான் தீருமா
உன் மோகம்தான் போகுமா
காதல் வலையிலே ஏன் மாட்டினாய்
இந்தக் கன்னி மனதை நீ ஏன் வாட்டினாய்
யம்மா யம்மா தள்ளிச் செல்லு
எங்கே எல்லை அங்கே நில்லு
ஹான்ஹ்ம்ம்
ஒட்டிக் கொள்ள வந்தேன்
எட்டிச் செல்கிறாய்
கட்டிக் கொள்ள வந்தேன்
விட்டுச் செல்கிறாய்
கிட்ட வந்து நின்றால்
கெட்டுப் போகுது
கட்டவிழ்ந்து நெஞ்சும்
விட்டுப் போகுது
புதிர் போடும் கிளியே கிளியேஏ
புதிர் போடும் கிளியே கிளியே
வீணான பழியே பழியே
உனக்கு வந்த இணையே இணையே
தொடுப்பதென்ன கணையே கணையே
வேறு இடம் உனக்கிருக்கு
இந்த வெற்று இடம் உனக்கெதுக்கு
நான் உண்மை என்று கண்டதும்
உன்னை நம்பி வந்ததும் வீண் கதையாச்சு
யம்மா யம்மா தள்ளிச் செல்லு
எங்கே எல்லை அங்கே நில்லு
வெண்ணிலவுக்கிங்கே அல்லி ஏக்கமே
கண்ணனுக்கு அங்கே ராதை எத்தனை
கோபியர்கள் உள்ளம் கோகுலத்திலே
கண்ணன் அவன் நெஞ்சம் யாரிடத்திலே
ஒரு போதும் ராமன் இங்கேஏ
ஒரு போதும் ராமன் இங்கே
உருமாறிப் போவதும் இல்லை
கண்ணன் என என்னை நீயும்
காண்பதிலும் நியாயம் இல்லை
என்ன என்ன கதை இருக்கு
அதில் இந்தக் கதை இங்கு எதற்கு
அந்த கட்டுக் கதை நிஜமா
கண்ட கதை நிஜமா யார் விளக்குவது
யம்மா யம்மா தள்ளிச் செல்லு
எங்கே எல்லை அங்கே நில்லு
சொல்லாமல் நான் தீண்டினால்
எல்லை கோட்டை தாண்டினால்
என் தாபம்தான் தீருமா
உன் கோபம்தான் ஆறுமா
கண்ணில் கண்டதை ஏன் நம்பினாய்
உன் கன்னி உள்ளம் ஏனோ வெம்பினாய்
யம்மா யம்மா தள்ளிச் செல்லு
எங்கே எல்லை அங்கே நில்லு