Yarukku Yaarum Sonthamillai

Yarukku Yaarum Sonthamillai Song Lyrics In English


யாருக்கு யாரும் சொந்தமில்லை பாருக்குள் எனக்கோர் பந்தமில்லை கருவுக்குள்ளே தோன்றிவிட்டால் கவலைக்கு பஞ்சமுமில்லை

நீதி முன் பாசமும் மறையுமே கடமை முன் காதலும் சிதையுமே

சோதனை படலமும் தொடருமே சொந்தமும் பந்தமும் சிதறுமே பிறவியே அவதியேபிறவியே அவதியே இறந்திடில் துன்பமும் இல்லை

யாருக்கு யாரும் சொந்தமில்லை பாருக்குள் எனக்கோர் பந்தமில்லை கருவுக்குள்ளே தோன்றிவிட்டால் கவலைக்கு பஞ்சமுமில்லை

நெஞ்சத்தில் தோன்றிடும் கனவெல்லாம் நீரினில் அலைபோல் கலையுமே


மஞ்சத்தில் பேசிடும் கதையெல்லாம் மௌனத்தின் எல்லையில் முடியுமே உலகமே துயரமே உலகமே துயரமே துறந்திடில் துன்பமும் இல்லை

யாருக்கு யாரும் சொந்தமில்லை பாருக்குள் எனக்கோர் பந்தமில்லை கருவுக்குள்ளே தோன்றிவிட்டால் கவலைக்கு பஞ்சமுமில்லை

யாருக்கு யாரும் சொந்தமில்லை பாருக்குள் எனக்கோர் பந்தமில்லை