Yedarkkum Oru Kaalam

Yedarkkum Oru Kaalam Song Lyrics In English


எதற்கும் ஒரு காலம் உண்டு
பொறுத்திரு மகளே

எதற்கும் ஒரு காலம் உண்டு
பொறுத்திரு மகளே
இன்பத்திலும் துன்பத்திலும்
சிரித்திடு மகளே
இன்பத்திலும் துன்பத்திலும்
சிரித்திடு மகளேஏஏ

மனிதக் குலம் வாழ்வதிந்த
தத்துவத்திலே
மனிதக் குலம் வாழ்வதிந்த
தத்துவத்திலே
அனுபவத்தில் எழுதி வைத்தார் புத்தகத்திலே
பிள்ளைக்கென வாழ்ந்திருக்கும் தாய் இனத்திலே
பிறந்தவரில் நீயொருத்தி ஆயிரத்திலே
இன்பத்திலும் துன்பத்திலும்
சிரித்திடு மகளே

அடையாத கதவிருக்கும்
ஆலயத்திலே
அன்னையைப்போல் அன்பிருக்கும் அவனிடத்திலே
மகளே உன் மனக் குறையை அவனிடம் கூறு
கருணைக்குத்தான் கடவுளென்று
மற்றொரு பேரு
இன்பத்திலும் துன்பத்திலும்
சிரித்திடு மகளே


நிழல் கொடுக்க தந்தை என்ற
மரம் இருந்தது
நேற்று வந்த காற்றில் அந்த
மரம் விழுந்தது
கனி சுமந்த பூங்கொடியோ
கண் கலங்குது
இனியும் என்ன ஆகுமென்று பெண் கலங்குது
இன்பத்திலும் துன்பத்திலும்
சிரித்திடு மகளே

ஐயிரண்டு மாதம் சென்று பிள்ளை வந்தது
அம்மா உன் வேதனைக்கு எல்லை வந்தது
சிவகாமி பெற்றெடுத்த செல்வனல்லவோ
நாளை இந்த மண்ணையாளும் மன்னன் அல்லவோ
இன்பத்திலும் துன்பத்திலும்
சிரித்திடு மகளே

எதற்கும் ஒரு காலம் உண்டு
பொறுத்திரு மகளே
இன்பத்திலும் துன்பத்திலும்
சிரித்திடு மகளே