Yedhedho Sila |
---|
ஏதேதோ சில
ஏக்கங்கள் என்னை
அழகாய் சுடுகிறதே
ஏதேதோ சில கூச்சங்கள்
புது விதமாய் தொடுகிறதே
காலை வந்தாய்
மாலை வந்தாய் கனவுகளோடு
இரவிலும் வந்தாய் உனது
வருகையில் மனது தொலைய
ஏதேதோ சில
ஏக்கங்கள் ஏதேதோ
சில கூச்சங்கள் புது
விதமாய் தொடுகிறதே
வீட்டில் இருந்தாலும்
வீதியையே விழி பார்க்கிறதே
நீ வருவாய் என இதயம் பார்க்கிறதே
உன்னை பேசிடவே
சுகம் கூடிடுதே நேரமும்
ஓடாதே விழி காட்டிடவும்
பயம் ஆகிடுதே தூங்கிடவும்
தோணாதே
ஏதேதோ சில
ஏக்கங்கள் என்னை
அழகாய் சுடுகிறதே
ஏதேதோ சில கூச்சங்கள்
புது விதமாய் தொடுகிறதே
யாரும் என்னைக்
கண்டால் நீயா என தோன்றும்
நாளும் செய்கிறாய் மாயங்களே
பசி என்றுமே
பொறுக்காதவள் உன்னை
எண்ணியே இளைத்தேனடா
ருசி என்பதே உனது அன்புதான்
அடடா
ஏதேதோ சில
ஏக்கங்கள் என்னை
அழகாய் சுடுகிறதே
ஏதேதோ சில கூச்சங்கள்
புது விதமாய் தொடுகிறதே
காலை வந்தாய்
காலை வந்தாய்
மாலை வந்தாய்
மாலை வந்தாய்
கனவுகளோடு
இரவிலும் வந்தாய்
பெண் & உனது
வருகையில் மனது
தொலைய