Yemma Yea Alagamma |
---|
எம்மம்மா அழகம்மா
இருதயம் இருதயம்
மெழுகம்மா
எம்மா நீ அழகம்மா
விரல்பட விரல்பட
இளகம்மா
எம்மம்மா அழகம்மா
விழிகளில் நாணங்கள்
விலகம்மா
எம்மா நீ தமிழம்மா
இவனது தாய்மொழி
பழகம்மா
எம் மும் மும்
மா மா எம் மும் மும்
மா மா எம் மும் மும்
மா மா எம் மும் மும்
மா மா
யாரோ நீ எங்கிருந்து
வந்தாய் என் நெஞ்சில் சிறகு
தந்தாய் யாரோ நீ பூந்துயிலில்
வந்தாய் என் கண்ணில் கனவு
தந்தாய்
ஒரு சில நொடி
குழந்தையைப்போலே
மறு சில நொடி
கடவுளைப்போலே பல
நொடிகளில் அதனிலும்
மேலாய் நீயானாய்
உயிரினை தரும்
உதிரத்தை போலே உயரத்தை
தொடும் சிகரத்தை போலே அனு
தினம் தினம் அதனினும் பெரிதாய்
நீ ஆனாய்
எம்மா ஹே
அழகம்மா
இருதயம்
இருதயம் மெழுகம்மா
எம்மா நீ அழகம்மா
விரல்பட விரல்பட இளகம்மா
எம்மா ஹே அழகம்மா
விழிகளில் நாணம்
விலகம்மா
எம்மா நீ தமிழம்மா
இவனது தாய்மொழி பழகம்மா
வேறேதோ
தூவுலகம் ஒன்றில்
இவனாலே பூக்கிறேனே
ஊன் எல்லாம் மென் உணர்வு
ஒன்று இவனாலே பாயிரேனே
இவனிடம் பணம்
ஒரு துளி இல்லை மனிதரின்
குணம் சிறு துளி இல்லை
இவனிடம் மனம் முழுவதும்
முழுவதும் தந்தேனே
திரை விலகிய
மேடையைப்போலே
பனி விலகிய
கோடையைப்போலே
மழை நனைத்திடும்
ஆடையைப்போலே ஆனேனே
எம்மா ஹே
அழகம்மா
இருதயம்
இருதயம் மெழுகம்மா
எம்மா நீ அழகம்மா
விரல்பட விரல்பட இளகம்மா
எம்மா ஹே அழகம்மா
விழிகளில் நாணம்
விலகம்மா
எம்மா நீ தமிழம்மா
இவனது தாய்மொழி
மரம் செடி
கொடிகளை அணைத்தாயே
மலர்களின் இதழ்களை
துடைத்தாயே உன் கையில்
நான் சேர்ந்தால் என் செய்வாய்
வனங்களின்
மகன் என பிறந்தாயே
புலிகளின் மடியினில்
வளர்ந்தாயே மான்
என்னை நான் தந்தாள்
என் செய்வாய்
மாறாதே உன்னை
உன்போலே ஏற்றேனே
ஆனாலும் உண்மை
ஏன் என்றுக்கேட்டேனே
உரைத்திடு யாரோ நீ
யாரோ நீ எங்கிருந்து
வந்தாய் என் நெஞ்சில் சிறகு
தந்தாய் யாரோ நீ பூந்துயிலில்
வந்தாய் என் கண்ணில் கனவு
தந்தாய்
ஒரு சில நொடி
குழந்தையைப்போலே
மறு சில நொடி
கடவுளைப்போலே பல
நொடிகளில் அதனிலும்
மேலாய் நீயானாய்
உயிரினை தரும்
உதிரத்தை போலே உயரத்தை
தொடும் சிகரத்தை போலே அனு
தினம் தினம் அதனினும் பெரிதாய்
நீ ஆனாய்
எம்மா ஹே
அழகம்மா
இருதயம்
இருதயம் மெழுகம்மா
எம்மா நீ அழகம்மா
விரல்பட விரல்பட இளகம்மா
எம்மா ஹே அழகம்மா
விழிகளில் நாணம்
விலகம்மா
எம்மா நீ தமிழம்மா
இவனது தாய்மொழி பழகம்மா