Yen Pirandai Magane

Yen Pirandai Magane Song Lyrics In English


ஏன் பிறந்தாய்
மகனே ஏன்
பிறந்தாயோ

இல்லை ஒரு
பிள்ளையென்று
ஏங்குவோர் பலரிருக்க
இங்கு வந்து ஏன் பிறந்தாய்
செல்வ மகனே

ஏன் பிறந்தாய்
மகனே ஏன்
பிறந்தாயோ

நான் பிறந்த
காரணத்தை நானே
அறியும் முன்னே
நீயும் வந்து ஏன்
பிறந்தாய் செல்வ
மகனே

ஏன் பிறந்தாய்
மகனே ஏன்
பிறந்தாயோ

கை கால்கள்
விளங்காத கணவன்
குடிசையிலும் காதல்
மனம் விளங்க வந்தாள்
அன்னையடா


காதலிலும்
பெருமை இல்லை
கண்களுக்கும் இன்பமில்லை
கடமையில் ஈன்றெடுத்தாள்
உன்னையடா

ஏன் பிறந்தாய்
மகனே ஏன்
பிறந்தாயோ

மண் வளர்த்த
பொறுமையெல்லாம்
மனதில் வளர்த்தவளை
கண் மலர்ந்த பெண்
மயிலை நானடைந்தேன்

நீ வளர்ந்து
மரமாகி நிழல் தரும்
காலம் வரை தாய் மனதை
காத்திருப்பேன் தங்க மகனே

ஆராரோ
ஆரோ ஆரிராரோ