Yenada Kanna Intha

Yenada Kanna Intha Song Lyrics In English


ஏனடா கண்ணா இந்த பொல்லாத்தனம்
என்ன வேண்டும் சொல்லு ஏன் இன்று இந்த வம்பு

ஏனடா கண்ணா இந்த பொல்லாத்தனம்
என்ன வேண்டும் சொல்லு ஏன் இன்று இந்த வம்பு
நீ மயங்கவும் கண் மலரவும்
நீ மயங்கவும் கண் மலரவும்
நான் தாலாட்டு சொல்வேன் ஆராராரோ

ஏனடா கண்ணா இந்த பொல்லாத்தனம்
என்ன வேண்டும் சொல்லு ஏன் இன்று இந்த வம்பு

நீ எனக்கு பிள்ளை நான் சுமக்கவில்லை
தாய் என்ற பேர் வந்தது
நீயணைத்த முல்லை நாம் விதைத்ததில்லை
நமக்காக அவன் தந்தது

என் வீட்டில் வந்தாடும்
பொன்னூஞ்சல் நீயாகும்

ஏனடா கண்ணா இந்த பொல்லாத்தனம்
என்ன வேண்டும் சொல்லு ஏன் இன்று இந்த வம்பு


புள்ளி மானின் கன்று துள்ளியோடி இன்று
விளையாடும் அழகென்னவோ
சொந்தமான பின்பு எந்த நாளும் அன்பு
குறையாத உறவல்லவோ

தென்றல் போல் நீ வாழ்க
திங்கள் போல் நிறைவாக

ஏனடா கண்ணா இந்த பொல்லாத்தனம்
என்ன வேண்டும் சொல்லு ஏன் இன்று இந்த வம்பு

நீ மயங்கவும் கண் மலரவும்
நீ மயங்கவும் கண் மலரவும்
நான் தாலாட்டு சொல்வேன் ஆராராரோ

இருவர் : ஏனடா கண்ணா இந்த பொல்லாத்தனம்
என்ன வேண்டும் சொல்லு ஏன் இன்று இந்த வம்பு
ஹாஹாஆஅஆஅஆ
ஹாஹாஹாஆஅஆஅஆ
ஹாஹாஆஅஆஅஆ
ஹாஹாஹாஆஅஆஅஆ