Yengirundhai Nee |
---|
எங்கிருந்தாய் நீ
எங்கிருப்பாய் நீ
என் செய்வாய் நீ
என் இறைவா என் இறைவா
நீ வருவாய்
வானம் படைத்தாய்
பூமியும் படைத்தாய்
உடலை இயக்கும் உயிர்
படைத்தாய்
நீயே படைத்தாய்
நீயே கொடுத்தாய்
நீயே எடுத்தாய் சரிதானோ
எனை ஏன் படைத்தாய்
எனக்கேன் கொடுத்தாய்
ஏன் நீ எடுத்தாய் சொல்வாயோ
கண்களில் வழியும்
நீர்த்துளி போலே நெஞ்சினில்
நிறைந்த இறை நீயே
ஜனனம் மரணம்
தினமும் நிகழும்
பூமியை ஏனோ நீ படைத்தாய்
யாரோ நீ யாரோ நீ
அறியேனே நான்
அறியேனே என் உள்ளத்தினாலே
உணர்ந்தேனே
ஆனந்த வாழ்க்கை
நான்தானே
பேரானந்தம் என்றும்
நீதானே
உடல் விழுவேனே
உயிர் தொழுவேனே
உன் அருளால் நான் எழுவேனே