Yenn Indha Paarvaigal Duet |
|---|
ஏன் இந்த பார்வைகள்
ஏன் இந்த மௌனங்கள்
நெஞ்சுக்குள் காற்றின்மை உண்டாக்குதோ
ஏன் இந்த வார்த்தைகள்
ஏன் இந்த வாசனை
நெஞ்சுக்குள் பேய் புயல் உண்டாக்குதோ
காதுகள் மூடும் போதினிலும்
மூளைக்குள் ஓடும் பாடல் ஒன்றாய்
உள்ளத்தை மூடி வைத்திருந்தேன்
நீ மட்டும் எப்படி உள்ளே சென்றாய்
என் நூலும் நீ ஆனாய்
என் வானம் நீ ஆனாய்
காற்றாடி ஆனேனடி
ஏன் இந்த பார்வைகள்
ஏன் இந்த மௌனங்கள்
நெஞ்சுக்குள் காற்றின்மை உண்டாக்குதோ
வண்ணம் மாறாத ஓவியமாய்
என்னை ஆங்காங்கே காட்டுகிறாய்
ஈரம் காய்ந்தாலும் பத்திரமாய்
என் பிம்பம் யாவும் பூட்டுகிறாய்
பின்னே ஓடிடும் காட்சியெல்லாம்
மின்னல் வேகத்தில் மாற்றுகிறாய்
கண்ணுக்குள் என்னை உள்ளிழுத்து
என் வாழ்வை புள்ளி ஆக்குகிறாய்
என்னை நான் காக்க வரைந்திருந்த
மாய கோடொன்றை நீக்குகிறாய்
இது மெய்யென்றோ பொய்யென்றோ
யோசிக்கும் முன் எந்தன்
ஐயத்தை போக்குகிறாய்
தேவை இல்லாத வெட்கமெல்லாம்
நேரம் பார்க்காமல் கொள்ளுகிறேன்
நான் ஓர் ஆண் என்று உண்மை கண்டு
அங்கே என்னை நான் கிள்ளுகிறேன்
காதல் நட்புக்கு மத்தியிலே
நெஞ்சம் பெண்டூலம் ஆகுமடி
தொட்டும் தீண்டாமல் பேசயிலே
வினாடி நின்று ஓடுமடி
இன்னும் ஓரிரு நொடிகளிலே
முத்தம் நான் வைக்க கூடுமடா
ஓஹ்ஹோ என்னென்ன குட்டைக்குள்
உன் பிம்பம் ஆடத்தான்
கல் ஒன்றை போட்டாய்யடா
ஏன் இந்த பார்வைகள்
ஏன் இந்த மௌனங்கள்
நெஞ்சுக்குள் காற்றின்மை உண்டாக்குதோ
ஏன் இந்த வார்த்தைகள்
ஏன் இந்த வாசனை
நெஞ்சுக்குள் பேய் புயல் உண்டாக்குதோ
காதுகள் மூடும் போதினிலும்
மூளைக்குள் ஓடும் பாடல் ஒன்றாய்
ஆண் மற்றும்
உள்ளத்தை மூடி வைத்திருந்தேன்
நீ மட்டும் எப்படி உள்ளே சென்றாய்
ஆண் மற்றும்
என் நூலும் நீ ஆனாய்
என் வானம் நீ ஆனாய்
காற்றாடி ஆனேன(டி)டா
