Yerikkarai Orathilae

Yerikkarai Orathilae Song Lyrics In English


ஹோ ஹோ ஹோ ஓஓ ஓஒ ஓஒ
ஏரிக்கரை ஓரத்திலே
எட்டு வேலி நிலமிருக்கு
எட்டு வேலி நிலத்திலேயும்
என்ன வைத்தால் தோப்பாகும்

ஏரிக்கரை ஓரத்திலே
எட்டு வேலி நிலமிருக்கு
எட்டு வேலி நிலத்திலேயும்
என்ன வைத்தால் தோப்பாகும்

வாழை வைத்தால் தோப்பாகும்
மஞ்சள் வைத்தால் பிஞ்சு விடும்
ஆழமாக உழுது வைத்தால்
அத்தனையும் பொன்னாகும்

வாழை வைத்தால் தோப்பாகும்
மஞ்சள் வைத்தால் பிஞ்சு விடும்
ஆழமாக உழுது வைத்தால்
அத்தனையும் பொன்னாகும்

தென் புறத்துச் சீமையிலே
தென் குமரிக் கடல் இருக்கு
தென் புறத்துச் சீமையிலே
தென் குமரிக் கடல் இருக்கு
குமரிக் கடல் மூழ்கி வந்தால்
கோடையிலே என்ன வரும்
குமரிக் கடல் மூழ்கி வந்தால்
கோடையிலே என்ன வரும்

சரம் சரமாய் முத்து வரும்
தனிப்பவளம் சேர்ந்து வரும்
சரம் சரமாய் முத்து வரும்
தனிப்பவளம் சேர்ந்து வரும்

குமரியுடன் கலந்து விட்டால்
குடும்பத்திலும் ஆசை வரும்
குமரியுடன் கலந்து விட்டால்
குடும்பத்திலும் ஆசை வரும்

ஏரிக்கரை ஓரத்திலே
எட்டு வேலி நிலமிருக்கு


ஆழமாக உழுது வைத்தால்
அத்தனையும் பொன்னாகும்

காலம் இன்று கனியும் என்று
கனவு கண்டு வந்து விட்டேன்
காலம் இன்று கனியும் என்று
கனவு கண்டு வந்து விட்டேன்

கண்ட கனா பலிக்காதோ
கதவு இன்று திறக்காதோ
கண்ட கனா பலிக்காதோ
கதவு இன்று திறக்காதோ

நினைத்து விட்டால் நடக்காதோ
நெருங்கி விட்டால் பிறக்காதோ
நினைத்து விட்டால் நடக்காதோ
நெருங்கி விட்டால் பிறக்காதோ
மனத்தினிலே முடித்து விட்டால்
வழிக்கதவும் திறக்காதோ

ஏரிக்கரை ஓரத்திலே
எட்டு வேலி நிலமிருக்கு

ஆழமாக உழுது வைத்தால்
அத்தனையும் பொன்னாகும்

இருவர் : ஏரிக்கரை ஓரத்திலே
எட்டு வேலி நிலமிருக்கு
ஆழமாக உழுது வைத்தால்
அத்தனையும் பொன்னாகும்