Yethanai Kaalam |
---|
எத்தனைக் காலம் கனவுகள் கண்டேன்
காண்பதற்கு உன்னை காண்பதற்கு
இறைவா உனக்கே குறையில்லை என்றால்
திரை எதற்கு இத்தனை திரை எதற்கு
எத்தனைக் காலம் கனவுகள் கண்டேன்
காண்பதற்கு உன்னை காண்பதற்கு
இறைவா உனக்கே குறையில்லை என்றால்
திரை எதற்கு இத்தனை திரை எதற்கு
எத்தனைக் காலம் கனவுகள் கண்டேன்
காண்பதற்கு உன்னை காண்பதற்கு
சித்திரைப்பாவை நெஞ்சில்
முத்திரையான உன்னை
தேடாதிருக்கலாமா
சித்திரைப்பாவை நெஞ்சில்
முத்திரையான உன்னை
தேடாதிருக்கலாமா ஆஆஆ
பத்தரைமாற்று கொண்ட
பசும்பொன் மேனியை
பாராதிருக்கலாமாஆஆஆ
எத்தனைக் காலம் கனவுகள் கண்டேன்
காண்பதற்கு உன்னை காண்பதற்கு
தூங்காத மஞ்சத்தில்
சுவையான இன்பத்தில்
தள்ளாடி தள்ளாடி விழவேண்டும்
தூங்காத மஞ்சத்தில்
சுவையான இன்பத்தில்
தள்ளாடி தள்ளாடி விழவேண்டும்
நீங்காத சொர்க்கத்தில்
நீ சேரும் நேரத்தில்
நான் கண்டு ஆனந்தம் பட வேண்டும்
நீங்காத சொர்க்கத்தில்
நீ சேரும் நேரத்தில்
நான் கண்டு ஆனந்தம் பட வேண்டும்
எத்தனைக் காலம் கனவுகள் கண்டேன்
காண்பதற்கு உன்னை காண்பதற்கு
இறைவா உனக்கே குறையில்லை என்றால்
திரை எதற்கு இத்தனை திரை எதற்கு
எத்தனைக் காலம் கனவுகள் கண்டேன்
காண்பதற்கு உன்னை காண்பதற்கு
மங்கை இங்கே மன்னன் அங்கே
மதிமயங்கும் முகம் எங்கே
முகமும் எங்கே
நெஞ்சம் இங்கே நினைவும் அங்கே
நாம் விரும்பும் உயிரும் எங்கே
உயிரும் எங்கே
நீயிருக்கும் இடத்திலிருந்து
நானிருக்க வேண்டுமென்று
தேடியிங்கு வந்தேன்
நேரங்காலம் வந்ததிங்கு
நிலைமை மாற வேண்டுமென்று
நீதி கேட்க வந்தேன்
உயிருக்கு உயிர் தேடி
உரிமைக்கு போராடி
உன்னை நான் நாடி வந்து ஆடுகிறேன்
என் உள்ளம் நொந்து உன் முன்னே பாடுகிறேன்
கொல்லாமல் கொல்லுகின்ற பொல்லாத கண்களுக்கு
சொல்லாமல் சொல்லியொரு விருந்து வைப்பேன்
அந்த சுவையில் உலகையே மறக்க வைப்பேன்