Yezhu Kadal Seemai |
---|
ஏழு கடல் சீமை
அதை ஆளுகின்ற நேர்மை
ஏழு கடல் சீமை
அதை ஆளுகின்ற நேர்மை
இவர் எங்க ஊரு ராஜா
தங்கமான ராஜா
இருவர் : இவர் எங்க ஊரு ராஜா
தங்கமான ராஜா
இருவர் : ஏழு கடல் சீமை
அதை ஆளுகின்ற நேர்மை
இவர் எங்க ஊரு ராஜா
தங்கமான ராஜா
இவர் எங்க ஊரு ராஜா
தங்கமான ராஜா
மாம்பழக் கொத்துக்கும்
மல்லிகை மொட்டுக்கும்
பொண்ணுன்னு பேரு வெச்சான்
மையிட்ட கண்ணுக்குள்
மந்திரம் போட்டவன்
சங்கதி சொல்லி வெச்சான்
இருவர் : ஓஹோ சங்கதி சொல்லி வெச்சான்
ஆஹா சங்கதி சொல்லி வெச்சான்
செவ்வந்தி பூவிலே
சிட்டுச் சிரிப்பிலே
சித்திரம் போட்டு வெச்சான்
எங்கள் தேவர் திருமகன்
வாழ்க சுகமென
மக்களை வாழ வெச்சான்
இருவர் : ஓஹோ மக்களை வாழ வெச்சான்
ஆஹா மக்களை வாழ வெச்சான்
ஏழு கடல் சீமை
அதை ஆளுகின்ற நேர்மை
இவர் எங்க ஊரு ராஜா
தங்கமான ராஜா
இவர் எங்க ஊரு ராஜா
தங்கமான ராஜா
கோட்டை இருக்குது
கொடி பறக்குது
தேவரின் சீமையிலே
சின்னக் கொடி இருக்குது
குலுங்கி நிக்குது
தேவியின் மேனியிலே
வேட்டை நடக்குது
விழி பறக்குது
ஆட்டம் நடக்கையிலே
ஆஹா ஆட்டம் நடக்கையிலே
ரெண்டு வெள்ளி சிலம்புகள்
துள்ளி குதிக்குது
பொறந்த நாளையிலே
இருவர் : ஓஹோ பொறந்த நாளையிலே
ஆஹா பொறந்த நாளையிலே
ஏழு கடல் சீமை
அதை ஆளுகின்ற நேர்மை
இவர் எங்க ஊரு ராஜா
தங்கமான ராஜா
இவர் எங்க ஊரு ராஜா
தங்கமான ராஜா
மரிக்கொழுந்துக்கு வாசம்
கொடுத்தவள்
மறத்தி பெண்ணடியோ
அவள் வாரி முடித்த பின்
கட்டி அணைச்சா
வாசம் வருமடியோ
இருவர் : ஓஹோ வாசம் வருமடியோ
ஆஹா வாசம் வருமடியோ
மாலை முடிக்கிற
காலம் பொறந்த பின்
வாசலை பாருமையோ
மாலை முடிக்கிற
காலம் பொறந்த பின்
வாசலை பாருமையோ
இப்போ வாழ்த்து படிக்கிற
நேரம் பிறந்தது
வாழ்ந்திட வாருமையோ
இருவர் : ஓஹோ வாழ்ந்திட வாருமையோ
ஆஹா வாழ்ந்திட வாருமையோ
ஏழு கடல் சீமை
அதை ஆளுகின்ற நேர்மை
இவர் எங்க ஊரு ராஜா
தங்கமான ராஜா
இவர் எங்க ஊரு ராஜா
தங்கமான ராஜா