Yezhulagam Aandu Varum |
---|
ஏழுலகம் ஆண்டு வரும் நீ
எங்க முத்துமாரியம்மா
எப்பொழுதும் நம்பி வந்தோம்
நாங்க நல்லதொரு காரியமா
அன்னை இவ கண் தொறந்தா
அண்டி வரும் இன்பமெல்லாம் பாருமம்மா
ஏழுலகம் ஆண்டு வரும் நீ
எங்க முத்துமாரியம்மா
எப்பொழுதும் நம்பி வந்தோம்
நாங்க நல்லதொரு காரியமா
மண்ணுல நட்ட வெத உன்
கண்ணுல பட்டதும் பூவாகும் காயாகும்
பொண்ணுக்கு வேளையும் வந்தா
தாலியும் மேளமும் வந்தாடும் பண்பாடும்
நாங்க நெனைக்கிற காரியம் பலிக்க
நீயும் கடைக்கண் பார்ப்பாயே
காரு பங்களா எல்லாமும் வாங்க
தேவி நீயருள் தருவாயே
அனைவரும் : நெனச்சதெல்லாம் கேட்டோம் தாயே
கொடுத்து காப்பாயே எங்க முத்துமாரி
ஏழுலகம் ஆண்டு வரும் நீ
எங்க முத்துமாரியம்மா
எப்பொழுதும் நம்பி வந்தோம்
நாங்க நல்லதொரு காரியமா
உள்ளத அள்ளியே கொடுக்கும்
வள்ளல போலவே வந்தாரே அய்யாவே
நல்லத சொல்லிக் கொடுத்து
நாட்டுக்கு நன்மையை செய்தாரே அய்யாவே
தலைவன் போலொரு தலைவனும் இல்ல
இவர எதிர்த்திட ஆளில்ல
நாளை நாட்டுக்கு இவர்தான் ராஜா
ஏழை மனசுக்கு இவர் ரோஜா
அனைவரும் : தலைவர் வாழ்ந்தா நாங்க வாழ்வோம்
தலைவரை காப்பாயே எங்க முத்துமாரி
ஏழுலகம் ஆண்டு வரும் நீ
எங்க முத்துமாரியம்மா
எப்பொழுதும் நம்பி வந்தோம்
நாங்க நல்லதொரு காரியமா
தீமையை செஞ்சவங்கள
தீயிலே போட்டு சுடுவாளே அம்மாவே
பாதகம் செஞ்சவங்கள
நோயில விட்டு வறுப்பாளே அம்மாவே
புலியும் ஊருக்குள் பசு போல் இருக்கு
புரிய வைப்பது உன் பொறுப்பு
உள்ளே எரியுது வேதனை நெருப்பு
அடங்க வைப்பது உன் தீர்ப்பு
தீமையெல்லாம் ஊமையானால்
தீங்கு நடக்காது நடக்காம காப்பாத்து
ஏழுலகம் ஆண்டு வரும் நீ
எங்க முத்துமாரியம்மா
எப்பொழுதும் நம்பி வந்தோம்
நாங்க நல்லதொரு காரியமா
அன்னை இவ கண் தொறந்தா
அண்டி வரும் இன்பமெல்லாம் பாருமம்மா
ஏழுலகம் ஆண்டு வரும் நீ
எங்க முத்துமாரியம்மா
எப்பொழுதும் நம்பி வந்தோம்
நாங்க நல்லதொரு காரியமா