Aadaikatti Vantha Nilavo |
---|
ஆடை கட்டி வந்த நிலவோ கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ ஆடை கட்டி வந்த நிலவோ கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ இவள் ஓடையிலே மிதக்கும் மலர் ஜாடையில் சிரிக்கும் இவள் காடு விட்டு வந்த மயிலோ நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோ இவள் ஓடையிலே மிதக்கும் மலர் ஜாடையில் சிரிக்கும் இவள் காடு விட்டு வந்த மயிலோ நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோ ஆடை கட்டி வந்த நிலவோ கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
துள்ளித் துள்ளி ஆடுமின்ப லோக மங்கை சொந்தமுள்ள ராணியிவள் நாகமங்கை துள்ளித் துள்ளி ஆடுமின்ப லோக மங்கை சொந்தமுள்ள ராணியிவள் நாகமங்கை எல்லையற்ற ஆசையிலே ஓடி வந்தாள் தள்ளி விட்டுப் போனபின்னும் தேடிவந்தாள் எல்லையற்ற ஆசையிலே ஓடி வந்தாள் தள்ளி விட்டுப் போனபின்னும் தேடிவந்தாள்
கிளைதானிருந்தும் கனியே சுமந்து தனியே கிடந்த கொடிதானே கண்ணாளனுடன் கலந்தானந்தமே – பெறக் காவினில் ஆடும் கிளிதானே
துள்ளித் துள்ளி ஆடுமின்ப லோக மங்கை சொந்தமுள்ள ராணியிவள் நாகமங்கை ஆஅஆஅஅந்தி வெயில் பெற்ற மகளோ குலுங்கும் அல்லி மலர் இனத்தவளோ அந்தி வெயில் பெற்ற மகளோ குலுங்கும் அல்லி மலர் இனத்தவளோ குன்றில் உந்தி விழும் நீரலையில் ஓடி விளையாடி மனம் சிந்தி வரும் தென்றல் தானோ இன்பம் தந்து மகிழ்கின்ற மானோ
அன்பு மனம் கூடுவதில் துன்பம் இல்லை அஞ்சி அஞ்சி ஓடுவதில் இன்பமில்லை வீணை மட்டுமிருந்தால் நாதமில்லை மீட்டும் விரல்கள் பிரிந்தால் கானமில்லை
இருவர் : இதயம் கனிந்து எதையும் மறந்து இருவர் மகிழ்ந்து உறவாட நன் நேரமிதே மனம் மீறிடுதே இருவர் : நன் நேரமிதே மனம் மீறிடுதே வன மாளிகையோரம் ஆடிடுவோம்
ஹாஆஆ ஆஅஆஅ இருவர் :
ஆடை கட்டி வந்த நிலவோ கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ இவள் ஓடையிலே மிதக்கும் மலர் ஜாடையில் சிரிக்கும் இவள் காடு விட்டு வந்த மயிலோ நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோ இவள் ஆடை கட்டி வந்த நிலவோ கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ