Aararo Aararo

Aararo Aararo Song Lyrics In English


ஆஅஹான் ஆஅஹான்
ஆஅஹான் ஆஅஹான்

ஆராரோ ஆராரோ ஆராரிரோ
ஆராரோ ஆராரோ ஆராரிரோ
ஆராரோ ஆராரோ ஆராரிரோ
ஆராரோ ஆராரோ ஆராரிரோ

அன்னை செல்வமே
அன்பில் தெய்வமே
அன்னை நெஞ்சிலே
வாழும் இன்பமே

என் கண்ணே கண்ணுறங்க
கனி அமுதே நீ உறங்க
ஒரு தாலாட்டுதான்
நான் சொல்லுவேன்

ஆராரோ ஆராரோ ஆராரிரோ
ஆராரோ ஆராரோ ஆராரிரோ

நானுறங்கும் பொண்ணு மெத்தை
நீயுறங்க போட்டு வச்சேன்
மயில் உறங்கும் பட்டு மெத்தை
மவனுறங்கதான் பொறந்த

கொல்லையில தென்னை வச்சு
குருத் ஓல கொட்டா செஞ்சு
சீனி அள்ளி போட்டு திங்க
செல்ல மகன் நீ பொறந்த

முந்தியில ஏனைகட்டி
முல்லையில பூ விரிச்சு
சன்ன குரல் பாட்டு கேட்க
சின்ன மகன் நீ பொறந்த

வெத்தல பந்தலில்
தாமரை மெத்தையில்
தாய் மடி சேர்ந்து தூங்கனும்

ஆராரோ ஆராரோ ஆராரிரோ
ஆராரோ ஆராரோ ஆராரிரோ


பட்டமரம் பாலும் ஊறும்
பாவக்காயில் தேனும் ஊறும்
பச்ச புள்ள நீ சிரிச்சா
பச்ச தண்ணிதான் இனிக்கும்

அன்பு மகன் நீ நடந்த
ஆழத் தடம் நான் ரசிக்க
தென் கிழக்கா பேஞ்ச மழை
அள்ளி வண்டல்தான் பரப்பும்

உன் பாதம் மேல பட்டு
என் பாவம் தீரனும்
பூ போல மேனி தொட்டு
என் ஆயுள் சேரனும்

புண்ணியம்தானே என்னுயிர்
வாழ என்னைக்கும்
நிரந்தரம் ஆகணும்

ஆராரோ ஆராரோ ஆராரிரோ
ஆராரோ ஆராரோ ஆராரிரோ

அன்னை செல்வமே
அன்பில் தெய்வமே
அன்னை நெஞ்சிலே
வாழும் இன்பமே

என் கண்ணே கண்ணுறங்க
கனி அமுதே நீ உறங்க
ஒரு தாலாட்டுதான்
நான் சொல்லுவேன்

ஆராரோ ஆராரோ ஆராரிரோ
ஆராரோ ஆராரோ ஆராரிரோ
ஆராரோ ஆராரோ ஆராரிரோ
ஆராரோ ஆராரோ ஆராரிரோ