Aarengum

Aarengum Song Lyrics In English


ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க
ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா உறங்க
நான் உறங்க வழியில்லையே ராசா இங்கே
நாதியற்று கிடக்குது உன் ரோசா

ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க
ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா உறங்க
நான் உறங்க வழியில்லையே மானே
இறைவன் நாடகத்தில் ஊமையடி நானே

சாட எழுதி வைச்ச
சாந்து சுவத்தில் எல்லாம்
ஆடி மழையடிச்சு
அத்தனையும் கரைஞ்சிருச்சு

தாங்கலையே தாங்கலையே
ஆசை வைச்ச இந்த மனம்
வாழ வைச்சு பாக்கலயே
சேர்ந்திருந்த ஊரு சனம்

ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க
ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா உறங்க
நான் உறங்க வழியில்லையே ராசா இங்கே
நாதியற்று கிடக்குது உன் ரோசா

மாமன் அடிச்சானோ மல்லியைப் பூச்செண்டால
அத்தை அடிச்சாளோ அல்லிப்பூ செண்டால
யார் அடிச்சா சொல்லி அழு
நீர் அடிச்சா நீர் விலகும்


காத்து மெல்ல தொட்டாலுமே
கறுத்தேதான் போகுமுன்னு
போத்தி வைச்ச ரோசாப் பூவை
போடுவேனா வெய்யிலில

சங்குக்குள்ள அடங்கிடுமா
கங்கை நதி நீரு
சந்திரனும் களங்கமுன்னு
சொன்னது தான் நம்மூரு

ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க
ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா உறங்க
நான் உறங்க வழியில்லையே மானே
இறைவன் நாடகத்தில் ஊமையடி நானே

ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க
ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா உறங்க
நான் உறங்க வழியில்லையே ராசா இங்கே
நாதியற்று கிடக்குது உன் ரோசா