Aathu Mettu Thopukulle |
---|
ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே
நான் ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே
அட அந்தி சாயும் நேரத்திலே
தெனம் காத்திருந்து காத்திருந்து
மனசும் கனலாப்போச்சு ஆசை மச்சான்ஆஆ
ஆ ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே
அடி அந்தி சாயும் நேரத்திலே
தெனம் காத்திருந்து காத்திருந்தேன்
மனசும் கனலாப் போச்சு வாடிப்புள்ளே
பன்னீர் தெளிக்கும் மேகம் அதுதான்
பருவ பெண்ணின் கூந்தலோ
கண்ணே உனது கைகள் இரண்டும்
நான் ஆடும் ஊஞ்சலோ
கண்ணா தழுவி நீயும் தானே
கன்னி மனசு மாத்துற
பொன்னா எனது தேகம் ஒண்ணு
உரசி உரசி பாக்குறே
இது பூவானது நேத்து
இத வா கைகளில் போட்டு
எங்கெங்கு நான் பார்த்தாலுமே
அங்கங்கு உன் முகம்தான்
ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே
அடி அந்தி சாயும் நேரத்திலே
தெனம் காத்திருந்து காத்திருந்தேன்
மனசும் கனலாப் போச்சு வாடிப்புள்ளே
சும்மா கிடந்த நெஞ்சுக்குள்ளே
சூடு கொஞ்சம் ஏறுது
தூங்கும் போதும் கண்ணுக்குள்ளே
உன் முகம் தான் தோணுது
மெத்தை விரிச்சு போடவான்னு
தேதி எதுக்கு கேக்கறே ஹஹ
மெல்ல மெல்ல அணைக்கும் போது
ஒதுங்கத்தானே பார்க்குறே
அடி வாவா எந்தன் தேவி
சொல்லப்போறேன் ஒரு சேதி
கொஞ்சம் பொறு நெஞ்சில் ஒரு
பஞ்சணை தான் இடுவேன் நான்
நான் ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே
அட அந்தி சாயும் நேரத்திலே
தெனம் காத்திருந்து காத்திருந்து
மனசும் கனலாப்போச்சு ஆசை மச்சான்ஆஆ
ஆஅஆஅ
ஓ
ஆஅ
இருவர் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்